டீசல் விலை உயர்வு! லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது!  

Last Updated : Jun 18, 2018, 12:33 PM IST
டீசல் விலை உயர்வு! லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்! title=

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 79.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 71.54-ஆகவும் விற்பனை ஆகிறது. 

இந்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, டீசல் விலை தினசரி உயர்வு மற்றும் 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

இந்நிலையில், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.  ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார்.

Trending News