உ.பி பாஜக தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

Last Updated : Aug 12, 2016, 01:46 PM IST
உ.பி பாஜக தலைவர் மீது துப்பாக்கிச்சூடு title=

டெல்லி புறநகர் பகுதியான காசியாபாத்தில்(உத்தர பிரதேச மாநிலம்) பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பிரிஜ்பால் டியோட்டியா தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அதிநவீன ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியை கொண்டு பிரிஜ்பால் டியோட்டியா சுட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த பாஜக தலைவர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நொய்டாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டியோட்டியாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியை கொண்டு சுமார் நூறுக்கும் மேற்பட்ட முறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த சம்பவம் பற்றி காசியாபாத் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டல்ஜீத் சவுத்ரி கூறுகையில்:- இந்த தாக்குதலுக்கு ஏகே-47 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Trending News