உ.பி.,யில் தேர்தல்: 73 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். 

Last Updated : Feb 11, 2017, 08:40 AM IST
உ.பி.,யில் தேர்தல்: 73 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது title=

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். 

உத்தர பிரதேசத்தில் இன்று துவங்கி, மார்ச் 8-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச், 11-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ.க., பகுஜன் சமாஜ், காங்கிரஸ், உடன் கைகோர்த்துள்ள ஆளும் சமாஜ்வாடி ஆகிய அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல், 73 தொகுதிகளில், இன்று நடைபெறுகிறது. 15 மாவட்டங்களைச் சேர்ந்த 2.6 கோடி வாக்காளர்கள், இத்தேர்தலில் ஓட்டு போடுகின்றனர். 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 26823 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 

இந்நிலையில் காலை 7 மணிக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கி, நடைபெற்று வருகிறது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

 5 மாநிலங்களிலும் மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Trending News