Video: 75-வயது மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்!

கொல்கத்தாவின் காரையா பகுதியில் தன் அனுமதி இன்றி பூ பறித்த மாமியாரை அவரது மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jun 1, 2018, 02:23 PM IST
Video: 75-வயது மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்! title=

கொல்கத்தாவின் காரையா பகுதியில் தன் அனுமதி இன்றி பூ பறித்த மாமியாரை அவரது மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

கொல்காத்தாவின் காரையா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா பால், இவர் தனது 75-வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவினை ஸ்வப்னாவின் அண்டை வீட்டு பெண்மனி படம் பிடித்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாக பரவிய நிலையில் கொல்கத்தா காவல்துறையால் ஸ்வப்னா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வப்னாவின் கைதிற்கு பிறகு, இச்சம்பவத்தில் இடம்பெற்ற இருவரது புகைப்படத்தினையும் கொல்கத்தா காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜஷோதாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், பின்னர் தன் மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் அன்று கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா மீது கொடூரமான செயல் இழைத்தோர் என்ற பெயரில் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News