Yes வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது?

ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, 31 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.c 

Last Updated : Mar 8, 2020, 10:02 AM IST
Yes வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது? title=

யெஸ் வங்கியின் (Yes Bank) நிறுவனர் ராணா கபூர் (Rana Kapoor), ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 31 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல், அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை ராணா கபூருடன் நடந்து கொண்டிருந்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, வொர்லியில் உள்ள ராணா கபூரின் வீடு சமுத்ரி மஹால் மீது அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. டிஹெச்எஃப்எல் மற்றும் யுபி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றில் ஒழுங்கற்றதாகக் கண்டறியப்பட்ட அதே வழக்கில் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதே வழக்கு தொடர்பாக அவரது மகளிடமிருந்து ஒரு அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது, ஆனால் இப்போது அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். ED அதிகாரிகள் இப்போது ராணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

வியாழக்கிழமை, இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக YES வங்கியின் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது, இதன் கீழ் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 50,000 க்கும் அதிகமான பணத்தை திரும்பப் பெற முடியாது என்று கூறப்பட்டது.

Trending News