IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அதிரடி வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது! 

Last Updated : May 7, 2018, 06:18 AM IST
IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அதிரடி வெற்றி!  title=

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 39-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதினர். அதில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. 

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதில் பஞ்சாப் அணி கிட்டதட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதியாகிடவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கும் மோசமான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் போட்டி நடந்தது.

சாம்பியன் ஆக கஷ்டப்படும் பஞ்சாப் அணி அஸ்வின் தலைமையில் நேற்று எப்படியாது வெற்றி வெற்றி பெறவேண்டும் என்று ஆடியது. ராஜஸ்தான் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் முதலில் ஆடிய ராஜஸ்தான் தொடக்கத்தில் திணற தொடங்கியது. பின் நிதானமாக ஆடியது. இந்த போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. 

எப்போதும் போல ராஜஸ்தான் சொதப்பியது. பட்லர் மட்டும் அதிரடியாக ஆடினார். இவர் ரன்கள் 51 எடுத்தார். ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய பஞ்சாப் அதிரடியாக ஆடியது. ராகுல் 84 ரன்கள் எடுத்தார். நாயர் 31 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் 18.4 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 153 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது! 

 

Trending News