7th Pay Commission ஊழியர்களுக்கு ஜாக்பாட்: HBA திட்டத்தின் கால அளவை நீட்டித்தது அரசு!

மத்திய அரசு, வீடு கட்ட முன்பணம் பெறும் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பயனை 31 மார்ச் 2022 வரை அரசு நீட்டித்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 01:47 PM IST
7th Pay Commission ஊழியர்களுக்கு ஜாக்பாட்: HBA திட்டத்தின் கால அளவை நீட்டித்தது அரசு! title=

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கம் 2021 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR)  மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது.

இதற்குப் பிறகு, இப்போது மத்திய அரசு, ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வாங்கும் முன்பணத் திட்டத்தை (HBA Scheme) மார்ச் 2022 வரை நீட்டித்துள்ளது. அதாவது, ஒரு அரசு ஊழியர் வீட்டை வாங்க விரும்பினால், அவர் மார்ச் 2022 வரை மலிவு விலையில் வீட்டுக் கடன் பெற முடியும்.

வீட்டுக்கடன் மலிவான வட்டி விகிதத்தில் கிடைக்கும்

வீடு கட்ட முன்பணம் பெறும் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பயனை 31 மார்ச் 2022 வரை அரசு நீட்டித்துள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7.9 சதவீதத்தில் அரசு வீட்டுக்கடன் வழங்குகிறது. HBA இல் நிவாரணம் கொடுப்பதற்கு முன், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ (Dearness Allowance) மற்றும் டிஆரில் பெரிய நிவாரணம் அளித்துள்ளது.

ALSO READ: 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கும் டி.ஏ., ஊதிய உயர்வின் கணக்கீடு இதோ!!

HBA என்றால் என்ன?

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை வழங்குகிறது. இதில், ஊழியர் சொந்தமாக அல்லது அவரது மனைவியின் மனையில் வீடு கட்ட முன் பணம் பெறலாம். இந்த திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 31 மார்ச் 2022 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.9% வட்டி விகிதத்தில் வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது.

7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மற்றும் எச்.பி.ஏ விதிகளின் பரிந்துரைகளின்படி, புதிய வீடு கட்ட அல்லது புதிய வீடு-பிளாட் வாங்க, 34 மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ .25 லட்சம் அல்லது வீட்டின் விலை அல்லது முன்பணத்தை திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கான அட்வான்சை ஊழியர்கள் பெறலாம். அட்வான்ஸ் தொகைக்கு 7.9% வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வூதியதாரர்களுக்காக அரசாங்கத்தால் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர் இறந்தால், ​​அவரது குடும்பம் அல்லது ஓய்வூதியத்தை சார்ந்திருப்பவர்கள் (50 சதவீதம் பங்கு) அரசாங்கத்தால் பயனடைவார்கள். பணியாளரின் சார்புடையவர்களுக்கு ஓய்வூதியத்தின் பயனைப் பெறுவதற்காக 7 வருட கால சேவை வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News