7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், சம்பளத்தோடு ரூ.4500 சேர்ந்து வரும்

கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாத ஊழியர்கள், இப்போது அதை கோரலாம், இதற்காக அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 02:49 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், சம்பளத்தோடு ரூ.4500 சேர்ந்து வரும் title=

7th Pay Commission: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இருந்த முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, இப்போது மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாத ஊழியர்கள், இப்போது அதை கோரலாம், இதற்காக அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.

கொரோனா காரணமாக ஊழியர்கள் CEA ஐ கோர முடியவில்லை

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள். 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாதம் ரூ .2,250 உதவித்தொகை கிடைக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் CEA ஐ கோர முடியவில்லை.

செல்ஃப் டிக்லரேஷன் அளிக்க வேண்டும்

கடந்த மாதம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஆஃபிஸ் ஆஃப் மெமோராண்டத்தை (OM) வெளியிட்டது. கொரோனா (Coronavirus) காரணமாக, மத்திய பணியாளர்கள், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அதில் கூறப்பட்டது. ஏனெனில், கட்டணங்களை ஆன்லைனில் டெபாசிட் செய்த பிறகும், பள்ளியில் இருந்து எஸ்எம்எஸ்/இ-மெயில் மூலம் தேர்வு முடிவு / ரிபோர்ட் கார்டுகள் ஆகியவை அனுப்பப்படவில்லை.

ALSO READ: 7th Pay Commission: சம்பள உயர்வு; மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி 

CEA கிளெய்மை, Self declaration அல்லது, தேர்வு முடிவு / ரிப்போர்ட் கார்ட் / கட்டண செலுத்துதல் ஆகியவற்றின் எஸ்எம்எஸ்/மின்-அஞ்சல் ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமும் கிளெயிம் செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 இல் முடிவடையும் கல்வி ஆண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.

உங்களுக்கு எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?

மத்திய அரசு (Central Government) ஊழியர்கள், இரண்டு குழந்தைகளின் கல்விக்காக குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதம் ரூ. 2250 ஆகும். அதாவது, இரண்டு குழந்தைகள் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ. 4500 கிடைக்கும். இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தைகளாக இருந்தால், இந்த உதவித்தொகை முதல் குழந்தையுடன் இரண்டாவதாக பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கல்விக்காகவும் வழங்கப்படுகிறது.

இரண்டு கல்வி நாட்காட்டிகளின் படி, ஒரு குழந்தைக்கு ரூ. 4500 செலுத்த வேண்டும். மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 க்கு ஒரு ஊழியர் இன்னும் கிளெயிம் செய்யவில்லை என்றால், அதையும் கிளெயிம் செய்துகொள்ளலாம். அதன் பிறகு, அவரது சம்பளத்தில் ரூ .4500 சேர்க்கப்படும்.

CEA கோரிக்கைக்கு பல ஆவணங்கள் தேவைப்படுகின்றன

குழந்தைகள் கல்வி உதவித்தொகையை பெற, மத்திய ஊழியர்கள் பள்ளி சான்றிதழ் மற்றும் கிளெயிம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியிலிருந்து பெறப்பட்ட பிரகடனத்தில், குழந்தை அவர்களது நிறுவனத்தில்தான் படிக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கும். இதனுடன், குழந்தைகள் படித்த கல்வியாண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். CEA கிளெயிம் செய்ய, குழந்தைகளின் ரிப்பேர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ALSO READ: 7th Pay Commission: செப்டம்பர் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News