7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் மாஸ் செய்தி, அறிவிப்பு எப்போது?

7th Pay Commission: ஒவ்வொரு ஆண்டையும் போலவே இம்முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 05:31 PM IST
  • ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் அதிகரிக்கப்படுகிறது.
  • கடந்த செப்டம்பரில், 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் பலனைப் பெற்றனர்.
  • தற்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் மாஸ் செய்தி, அறிவிப்பு எப்போது? title=

அகவிலைப்படி சமீபத்திய லேட்டஸ்ட் அப்டேட்: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டுடன் சிறப்பான செய்தியை கொண்டுவரவுள்ளது. ஆம், ஒவ்வொரு ஆண்டையும் போலவே இம்முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. முதல் முறை ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு அளிக்கப்படுகின்றது. ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022-ல் அதிகரிக்கப்பட்டது. இப்போது அடுத்த அதிகரிப்பு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. 

அகவிலைபப்டியுடன் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கும்

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த அகவிலைப்படி, மார்ச் மாதம் நிலுவைத் தொகையுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதனுடன் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தையும் அரசு உயர்த்தும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர, சில ஊடகங்களில், 18 மாத டிஏ நிலுவைத் தொகையும் பெறப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டர் திருத்தத்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருமா? 

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது

ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (டிஆர்),  அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில், 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் பலனைப் பெற்றனர். தற்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உள்ளது. இப்போது ஜனவரியில் 4 சதவீதம் அதிகரித்து இது 42 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது.

ஏஐசிபிஐ குறியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 4 சதவீத டிஏ உயர்வு நிச்சயமாக இருக்கும் என தெரிகிறது. அக்டோபர் 2022 இல், இந்த குறியீடு 132.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அதிர்ச்சி, ஏமாற்றம்!! அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்காது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News