7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டர் திருத்தத்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும்.   

Written by - RK Spark | Last Updated : Dec 15, 2022, 06:31 AM IST
  • ஊழியர்களின் சம்பளத்தில் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய மாற்றம்.
  • அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவால் ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.
  • அடிப்படை சம்பள உயர்வால், அகவிலைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ்களும் அதிகரிக்கும்.
7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டர் திருத்தத்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருமா? title=

மத்திய அரசு தற்போது ஊழியர்களின் சம்பளம், அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் உயர்வு, ஃபிட்மென்ட் பேக்டர் திருத்தம் மற்றும் 18 மாத டிஏ நிலுவைத் தொகை போன்ற விஷயங்களில் மிகப்பெரிய முடிவை எடுக்கும்பட்சத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறும் என்று செய்திகள் கூறுகிறது. அடுத்த ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவால் ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காகவும் உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

அரசு ஃபிட்மென்ட் பேக்டரி உயர்த்தினால் முதலாவதாக, கர்ச்மாரிகளின் சம்பளம் ரூ.8,000 உயர்த்தப்படும். அடிப்படை சம்பள உயர்வால், அகவிலைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ்களும் அதிகரிக்கும். ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும். உங்கள் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸைத் தவிர்த்து 2.57 ஃபிட்மென்ட் பேக்ட்ரின் படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும். அதுவே ஃபிட்மென்ட் பேக்டர் 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) கிடைக்கும்.

கடந்த தீபாவளி பண்டிகைக்கும் முன்னதாக மத்திய அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதன் மூலம் 34 சதவீதத்தில் இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தது. இதன் வாயிலாக அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத அகவிலைப்படி நிலுவை தொகையும் கிடைத்தது. இப்போது மத்திய அரசு ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்துவதன் மூலம் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News