7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது பற்றி அரசாங்கம் விரைவில் நல்ல நடவடிக்கையை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 23, 2022, 07:10 AM IST
  • 18 மாத டிஏ தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது பற்றி நடவடிக்கையை.
  • அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான தீர்வு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்குமா? title=

கடந்த சில தினங்களாகவே 7வது ஊதியக் குழுவின் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து பல செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.  அதன்படி ஆகஸ்ட் 2022-ல் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்தி கூறப்படும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையைகுறித்த அறிவிப்பும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது பற்றி அரசாங்கம் விரைவில் நல்ல நடவடிக்கையை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ், அதிரடி ஊதிய உயர்வு

கவுன்சில் இதுகுறித்த தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து இருப்பதாகவும், ஆனால் இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்று ஜேசிஎம் கவுன்சிலின் செயலாளர் கூறியுள்ளார்.  மேலும் கேபினெட் செக்ரெட்டரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான தீர்வு குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடைபெற உள்ளது.  அந்த கூட்டத்தில், 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை என்றும், லெவல்-13க்கான டிஏ நிலுவைத் தொகை ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையிலும், லெவல்-14க்கு (செலுத்துதல்) என்றும் முன்னர் கூறப்பட்டு இருந்தது.  ஒரு பணியாளரின் டிஏ நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் 2,18,200 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.  சில தகவல்களின் அடிப்படையில் நாட்டில் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 18 மாத நிலுவைத் தொகையைப் பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் உயரப்போகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News