8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் உயரப்போகிறதா?

8th Pay Commission: மத்திய ஊழியர்களின் அமைப்புகள் தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு 18,000 ஆக வைத்திருக்கின்றன, இது 2.57 மடங்கு ஆகும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2022, 06:24 AM IST
  • மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு 18,000 ஆக வைத்திருக்கின்றன.
  • 7வது ஊதியக் குழு இந்த வரம்பை 3.68 மடங்கு உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
  • ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் உயரப்போகிறதா? title=

8th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக புதிய குறிப்பாணையை அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  அந்த குறிப்பாணையை ஊழியர்கள் விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.  அரசு ஊழியர்கள் தயாரிக்கும் அந்த குறிப்பாணையில் உள்ள பரிந்துரைகள் ஃபிட்மென்ட் பேக்டரின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது? 

சில தகவல்களின் அடிப்படையில், மத்திய ஊழியர்களின் அமைப்புகள் தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு 18,000 ஆக வைத்திருக்கின்றன, இது 2.57 மடங்கு ஆகும்.  ஆனால் 7வது ஊதியக் குழு இந்த வரம்பை 3.68 மடங்கு உயர்த்த பரிந்துரைத்துள்ளது.  ​​ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை அரசு ஏற்குமானால், ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 மடங்கு உயர்த்தும்போது, ​​ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.  7வது ஊதியக் குழுவுக்குப் பிறகு மற்றொரு புதிய ஊதியக் குழு இருக்காது என்றும், அதற்குப் பதிலாக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான மாதிரியை தானாகவே அமைக்கும் முறையை அரசு செயல்படுத்தலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகளின்படி, ஊழியர்களின் ஊதியத்தை தீர்மானிக்கும் புதிய ஃபார்முலாவை மத்திய அரசு கொண்டு வரலாம், புதிய சம்பள உயர்வு செயல்திறன் இணைக்கப்பட்ட அதிகரிப்பின் அடிப்படையில் இருக்கும் என்பது புலப்படுகிறது.  அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியவுடன் சம்பளக் கூறுகளை தானாகவே கணக்கிடும் ஃபார்முலாவில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஆண்டுக்கு ரூ. 96,000 உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News