7th Pay Commission: விரைவில் 50% டிஏ, ஊழியர்களின் ஊதியம் அதிரடி ஏற்றம் காணும்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி 2023 முதல் 4% அகவிலைப்படி அதிகரிப்பு பொருந்தும். இப்போது அடுத்த திருத்தம் ஜூலை 2023 முதல் செய்யப்பட உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2023, 10:40 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி என்ன?
  • 7ஆவது ஊத்யக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் அரசாங்கம் திருத்தம் செய்துள்ளதா?
  • மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை வேறு எப்படி உயர்த்த முடியும்?
7th Pay Commission: விரைவில் 50% டிஏ, ஊழியர்களின் ஊதியம் அதிரடி  ஏற்றம் காணும் title=

அகவிலைப்படி உயர்வு: வரும் ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கலாம். அகவிலைப்படி அதிகரிப்பு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றம் மற்றும் எஹ்ஆர்ஏ திருத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு உள்ளன. இது தவிர, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலும் மிகப்பெரிய உயர்வு இருக்கும். இந்த உயர்வு எப்படி நடக்கும் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படை ஆண்டு 2001 இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 2020 முதல், மத்திய அரசு அகவிலைப்படி கணக்கீட்டின் அடிப்படை ஆண்டை மாற்றி 2016 இன் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) செயல்படுத்தியது. 

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது? 

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி 2023 முதல் 4% அகவிலைப்படி அதிகரிப்பு பொருந்தும். இப்போது அடுத்த திருத்தம் ஜூலை 2023 முதல் செய்யப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் இம்முறை எவ்வளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) எண்களில் ஏற்படும் மாற்றம், இப்போது அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். இதுவரை மொத்த டிஏ மதிப்பெண் 133.3 புள்ளிகளை எட்டியுள்ளது. அதாவது இதன் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு 44.46% -ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மார்ச் வரை மட்டுமே. ஏப்ரல் எண் மே இறுதியில் அறிவிக்கப்படும். இதிலும் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த எண்ணில் மிகப்பெரிய அதிகரிப்பு இல்லாவிட்டாலும், டிஏ அதிகரிக்கும். தோராயமாக, அகவிலைப்படி 45 சதவீதமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இன்னும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்ணிக்கை வரவிருக்கின்றது. அதன் பிறகு டிஏ மேலும் 1% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி 38% ஆகும். இதில் 4 சதவீதம் அதிகரித்தால், அது 46 சதவீதத்தை எட்டும். இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இதற்கு, மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்களுக்குப் பிறகுதான் முழு விவரமும் தெளிவாகத் தெரியும்.

7ஆவது ஊத்யக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் அரசாங்கம் திருத்தம் செய்துள்ளதா?

7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது, ​​ஃபிட்மென்ட் ஃபாக்டரின் கீழ், ஊழியர்களுக்கு 2.57 மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது, ​​லெவல் 1 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் ஆகும். இது ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அடிப்படை சம்பளமும் உயரும். இது 3 மடங்கு அல்லது 3.67 மடங்கு அதிகரிக்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை வேறு எப்படி உயர்த்த முடியும்?

2024-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெருமளவு உயர்த்தப்படும். ஏனெனில், இந்த ஆண்டில் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும். ஜூலை 2023 இல் 4 சதவீதம் அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி 46 சதவீதமாக இருக்கும். 2024 ஜனவரியிலும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தால், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும். அத்தகைய சூழ்நிலையில், மொத்த அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) குறைக்கப்படும். 

மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் செய்தி: விரைவில் பம்பர் சம்பள ஏற்றம்... இதுதான் காரணம்!!

அரசு அடிப்படை ஆண்டை மாற்றியபோது, அகவிலைப்படி ​​50% -ஐ எட்டினால், அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி பணம் சேர்க்கப்படும் என்ற இந்த விதியையும் அமல்படுத்தியது. இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.

மத்திய ஊழியர்களின் எச்.ஆர்.ஏ. பெரிய அளவில் உயரும்

7வது ஊதியக் குழுவின் படி, அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாறினால், அதை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். ஆனால், வீட்டு வாடகை கொடுப்பனவின் (HRA) திருத்தமும் 50% டிஏ உயர்வில்தான் நடக்கும். அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தால் எஹ்ஆர்ஏ 3 சதவீதம் அதிகரிக்கும் என  DoPT இன் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஹ்ஆர்ஏ மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள எஹ்ஆர்ஏ விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆகும். அகவிலைப்படி 25% ஐத் தாண்டியபோது எஹ்ஆர்ஏ விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% என நிர்ணயிக்கப்பட்டது. வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். எஹ்ஆர்ஏ -இன் அதிகபட்ச விகிதம் தற்போதுள்ள 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால், அகவிலைப்படி திருத்தம் 50% தாண்டும் போதுதான் இது நடக்கும்.

பிரிவு வாரியாக எஹ்ஆர்ஏ -வில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்? 

மெமோராண்டம் படி, அகவிலைப்படி 50% ஐ தாண்டும்போது எஹ்ஆர்ஏ 30%, 20% மற்றும் 10% ஆக இருக்கும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகை இருக்கிறது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்கள் 27% எஹ்ஆர்ஏ பெறுகிறார்கள், இது அகவிலைப்படி 50% ஆனவுடன் என்றால் 30% ஆக இருக்கும். அதே சமயம், ஒய் வகுப்பினருக்கு, 18 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு, 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... டிஏ மட்டுமல்ல.. இன்னும் 3 அலவன்ஸ்களில் ஏற்றம் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News