சூப்பர் அப்டேட்! கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவது இனி ஈஸி - எப்படி தெரியுமா?

IRCTC Update : பண்டிகை காலங்களில் கன்பார்ம் முன்பதிவு ரயில் டிக்கெட் பெறுவது இனி ஈஸி. அது எப்படி என விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Oct 13, 2024, 06:25 AM IST
  • கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறலாம்
  • ஐஆர்சிடிசி புதிய திட்டம் அறிமுகம்
  • இந்த ஆப்சனை தேர்வு செய்யுங்கள்
சூப்பர் அப்டேட்! கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவது இனி ஈஸி - எப்படி தெரியுமா?

IRCTC Update Confirmed Train Ticket : இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் நிலையில், பண்டிகை காலங்களில் ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரயில்வே வெப்சைட்டில் முன்பதிவு செய்தவர்களுக்கு கன்பார்ம் ரயில் டிக்கெட் கிடைப்பது இன்னும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பு நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் கூட கடைசி நிமிடம் வரை சீட் கிடைக்குமா? கிடைக்காதா என காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த சவாலை போக்கும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் நிலையில், தற்போது ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. இனி முன்பதிவு செய்தவர்கள் கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸி. 

Add Zee News as a Preferred Source

பண்டிகை காலங்களில் கூட ரயில் டிக்கெட் உறுதி செய்யலாம். இதற்காகவே இந்திய ரயில்வே, விகல்ப் யோஜனா என்ற வசதியை பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி அதன்மூலம் உறுதிசெய்த டிக்கெட்டைப் பெற வழிவகை செய்துள்ளது. விகல்ப் யோஜனா என்ற வசதிக்கு முன்னர் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைப்பது என்பது லாட்டரியில் பம்பர் பரிசு விழுவது போல தான் இருக்கும். பலர் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை பதிவு செய்கிறார்கள். ஆனால், சில அவசரநிலை காரணமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் அல்லது அலுவலகத்தில் இருந்து தாமதமாக விடுப்பு பெறுபவர்களுக்கு உறுதியான இருக்கை கிடைப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும், இந்திய ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 

மேலும் படிக்க | 1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

அப்படியிருந்தும் கூட இன்னும் பல வழித்தடங்களில் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெற முடியவில்லை. இவ்வாறான நிலையில், உறுதியான ரயில் டிக்கெட்டை பெறுவதற்கு ஏதேனும் தந்திரம் உள்ளதா என பலரும் தேடுகிறார்கள். அதற்கான பதில் ‘ஆம்’ என்பது தான். உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெற இந்திய ரயில்வே மாற்று ரயில், ரயில் தங்குமிடத் திட்டத்தை (ATAS) தொடங்கியுள்ளது. பல பயணிகளுக்கு இந்த திட்டம் பற்றி இன்னும் தெரியவில்லை. இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

மாற்று ரயில் திட்டம் (ATAS) என்றால் என்ன?

இப்போது பயணிகள் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ரயில் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். AI உதவியுடன் ரயில் முன்பதிவு செயல்முறையை எளிதாக்க ATAS தொடங்கப்பட்டது. இது விகல்ப் யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வழங்குவதாகும். ஒரு பயணி காத்திருப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்து ATAS என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த ரயிலில் இருக்கை இல்லை என்றால் அதே வழித்தடத்தில் வரும் மற்றொரு ரயிலில் இருக்கை வழங்க ATAS உதவுகிறது. 

டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அனைத்து ரயில்களிலும் இருக்கை கிடைக்கிறதா என்று சரிபார்த்து, எந்த ஒரு ரயிலிலும் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை இல்லை, நீங்கள் சோர்வடைந்து ஏதாவது ஒரு ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இருக்கும் வகையிலேயே புக் செய்வீர்கள். அப்போதும் சீட் கிடைக்கவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து, ATAS உங்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பி, கன்பார்ம் இருக்கை உள்ள ரயில் குறித்த விவரங்களை தெரிவிக்கும். இப்போது நீங்கள் உங்கள் காத்திருப்பு டிக்கெட்டை(Waiting List Train Ticket) வேறொரு ரயிலுக்கு மாற்றலாம், இதன் மூலம் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெறுவீர்கள். அவசரகாலத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விகல்ப் யோஜனாவின் பலன்களை நீங்கள் எவ்வாறு பெறலாம்

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, விகல்ப் யோஜனா பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்கள் வழித்தடத்தில் இயங்கும் 7 ரயில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இருக்கையை முன்பதிவு செய்த ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை கிடைக்கவில்லை என்றால் மற்றொரு ரயிலில் இருக்கை இருந்தால் அந்த ரயிலில் உங்களுக்கு சீட் ஒதுக்கப்படும்.

விகல்ப் யோஜனாவைத் தேர்ந்தெடுத்த பிறகு, உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெறுவீர்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் தேர்ந்தெடுத்த 7 ரயில்களில் சீட் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கன்பார்ம் சீட் கிடைக்கும். இந்திய ரயில்வேயின் இந்த வசதி, பயணிகளுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்குவதோடு, பயணத்தை எளிதாக்கவும் எடுத்திருக்கும் ஒரு முயற்சி தான் இது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்வது எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News