மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை உங்கள் மீதுதான்! தனலட்சுமியின் அருட்காடாட்சமும் உண்டு

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  அன்னை லட்சுமியின் சிறப்பு அருளும், கடைக்கண் பார்வையும் இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையையே மாற்றும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2022, 09:26 PM IST
  • தனலட்சுமியின் கடைக்கண் பார்வை இந்த 3 ராசிக்காரர்களுக்கு உண்டு
  • 2022 ஏப்ரலில் தன வரவு பெறப்போகும் ராசியான ராசிக்காரர்கள்
  • ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறப்போகிறது
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை உங்கள் மீதுதான்! தனலட்சுமியின் அருட்காடாட்சமும் உண்டு title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பார்வையில் ஏப்ரல் மாதம் சிறப்புமிக்கதாக இருக்கும். உண்மையில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் ராசிகள் மாறப்போகிறது. 

கிரகங்கள் மற்றும் ராசிகளின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அதே வேளையில், சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த பிரச்சனைகள் அகலும்.

ஏப்ரல் மாதம் எந்தெந்த கிரகங்கள் ராசி மாறப்போகின்றன, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

ஏப்ரல் 2022 இல் கிரகங்களின் மாற்றங்கள்
செவ்வாய் ஏப்ரல் 7-ம் தேதி கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 8ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழைகிறார். இதற்குப் பிறகு ஏப்ரல் 12-ம் தேதி முதல் ராகு-கேது பின்நோக்கி சஞ்சரிக்கிறார்கள். 

ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பிரவேசிக்கும். ஏப்ரல் 13 ஆம் தேதி, வியாழன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 27ல் புதன் ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். மாத இறுதியில், ஏப்ரல் 29 அன்று, சனி தேவன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.

இந்த கிரகங்களின் ராசி மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைக் கொடுக்கும் 

மிதுனம்: மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். மிதுன ராசியில் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு தொடங்கினாலும், ராசி மாற்றத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். 

இதனால், தடைபட்ட பணிகள் இம்மாதத்தில் முடியும். சில நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இது தவிர திருமணத் தடைகளும் நீங்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அனுகூலமாக இருக்கும். உத்யோகத்தில் சிறப்பு யோகம் உண்டாகும். அரசு வேலை செய்பவர்களின் இடத்தில் மாற்றம் வரலாம். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மகரம்: தற்போது மகர ராசியில் சனி இருக்கிறார். ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். சனியின் ராசி மாற்றத்தால் நிதிநிலை வலுவடையும். 

அதிர்ஷ்டமும் இந்த மாதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளும் லாபகரமான வாய்ப்புகளும் அமையும். கோபத்தை கட்டுப்படுத்தினால் போதும், எல்லாம் நன்றாகவே நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News