Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?

தற்போது போக்குவரத்து பல பரிணாமங்களை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது, ஆட்டோ, டாக்ஸிகளைத் தவிர ஓலா உபெர் போன்ற சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை அளிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2021, 02:04 PM IST
  • சிறிய நகரங்களிலும் இப்போது ஓலா மற்றும் உபெர் பயன்பாடு அதிகரித்து வருகிறது
  • Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்கிறாரக்ளா?
  • புகாரளிப்பது எப்படி?
Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?   title=

தற்போது போக்குவரத்து பல பரிணாமங்களை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது, ஆட்டோ, டாக்ஸிகளைத் தவிர ஓலா உபெர் போன்ற சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை அளிக்கின்றன.

ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனம், தனியார் வாகனமாக இருந்தாலும், நம்முடைய சொந்த வாகனம் போல வசதியாக செல்லலாம், நெரிசலும் இருக்காது என்பதால், இதுபோன்ற போக்குவரத்து சேவைகள் மிகவும் பிரபலமாகிவிட்டன.

அதிலும் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து பேருந்து போன்ற பொதுபோக்குவரத்தை மக்கள் தவிர்க்க விரும்பும் நிலையில், சொந்தமாக வாகனம் இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது ஓலா, உபெர் போன்ற சேவை நிறுவனங்கள்.

Also Read | Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தள்ளிப் போட செய்திருக்கும் அளவுக்கு இந்த தனியார் நிறுவன போக்குவரத்து சேவைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சொந்தமாக வாகனம் வாங்குவதற்கான செலவு, பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவு, வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் என பல சொந்த வாகனத்திற்கான செலவை ஒப்பிட்டுப் பார்த்து பலரும் இந்த சேவைகளை பயன்படுத்துவதே லாபம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

எனவே நாட்டின் பெரிய நகரங்களில், இப்போது ஓலா மற்றும் உபெர் சேவைகளுக்கான தேவைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நாட்டின் பெருநகரங்கள் உட்பட பல சிறிய நகரங்களிலும் இப்போது ஓலா மற்றும் உபெர் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஆனால் சமீபத்தில், OLA மற்றும் Uber இன் ஓட்டுநர்களால் பல முறை சவாரிகளை ரத்து செய்த வழக்குகள் உள்ளன. சமீபத்திய சில நாட்களில், OLA மற்றும் Uber இன் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் இடத்திற்கு வந்ததும், எந்தவொரு சரியான காரணத்தையும் தெரிவிக்காமல் தானாகவே சவாரியை ரத்து செய்வதாக கூறப்படுகிறது. 

Read Also | Cheapest Electric Car: அட்டகாசமான 3 வீலர் மின்சார கார் Strom R3 அறிமுகம், முன்பதிவு விவரம்

இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சங்கடம் ஏற்பட்டால், வாடிக்கையாளர் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீங்களும் இதுபோன்ற ஒரு சிக்கலைச் சந்தித்திருந்தால், அவர்கள் மீது எங்கு புகார் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

புகார் செய்வது எப்படி?
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான பயணத்தை OLA மற்றும் Uber எளிதாக்கியுள்ளன. OLA மற்றும் Uber இல் பயணம் செய்யும் போது நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், சவாரி முடிந்ததும் நீங்கள் சவாரி மற்றும் ஓட்டுநரைப் பற்றி மதிப்பாய்வு செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். 

இதற்கு நீங்கள் அந்த நிறுவனங்களின் வலைதளங்களுக்கு சென்று உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.ஓலாவிற்கான புகாரை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்    

உபெர் நிறுவன வாகன ஓட்டுநர்கள் தொடர்பான புகாரை பதிவு செய்ய உபெர் வலைதளமான இங்கு கிளிக் செய்யவும்.

Also Read | மகிந்திராவின் Mahindra XUV 700 விரைவில் அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News