ஆண்கள் திருமணத்தை தாண்டிய உறவுக்கு செல்ல... 5 முக்கிய காரணங்கள் - கேட்டா அதிர்ச்சி ஆவீங்க

Men Cheating In Relationship: காதலை தாண்டிய, திருமணத்தை தாண்டிய உறவில் ஆண்கள் ஈடுபடுவதற்கு சொல்லப்படும் முக்கியமான 5 காரணங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2024, 07:29 PM IST
  • இவை சரி என இங்கு கூறவில்லை.
  • திருமண உறவில் நம்பிக்கையே அடிப்படையானது.
  • அது சீர்குலைந்தால் பெரிய பிரச்னையாகும்.
ஆண்கள் திருமணத்தை தாண்டிய உறவுக்கு செல்ல... 5 முக்கிய காரணங்கள் - கேட்டா அதிர்ச்சி ஆவீங்க title=

Men Cheating In Relationship: காதல் உறவிலும் சரி, திருமண உறவிலும் சரி நம்பிக்கைதான் அடிப்படையான ஒன்று. அதன் அடிப்படையில்தான் அந்த உறவு பெரிய கட்டடம் போல் எழுகிறது. ஒருவேளை நம்பிக்கை என்பது தகர்ந்துவிட்டால் ஒட்டுமொத்த உறவும் சுக்குநூறாக இடிந்துவிடும். அது பலருக்கும் கடுமையான மனவேதனையை அளிக்கும். இதயத்தையே நொறுக்கிவிடும்.

திருமணத்தை தாண்டிய உறவு

அதிலும் குறிப்பாக, தன்னுடன் காதலிலோ அல்லது திருமண உறவிலோ இருக்கும்போதே மற்றொரு ஆண்/பெண் உடன் அவரின் பார்ட்னர் உறவில் இருப்பது தெரிந்துவிட்டால் நிச்சயம் அவர்களுக்கு கடுமையான மனவலியை ஏற்படுத்தும். தன்னை நம்பை வைத்து ஏமாற்றிவிட்டார் என்ற ஏமாற்றமும், ஆற்றாமையும், கோபமாக உருவெடுக்கும். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் விபரீதத்தில் சென்றுவிடும் வாய்ப்பும் அதிகம்.

இதுபோன்ற ஏமாற்றுபவர்கள் ஆண்கள்தான் அதிகமானோர், பெண்கள் தான் அதிகமானோர் என இல்லாமல் இரு தரப்பிலும் இந்த பிரச்னை இருக்கிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. இருப்பினும், ஆண்கள் ஒரே நேரத்தில் பலரை காதலிப்பது, திருமண உறவை தாண்டி வேறொரு உறவில் இருப்பது போன்றவை கலாச்சார ரீதியாக பொதுவான ஒன்றாக கருதப்படுவதுதான் தவறு. அதாவது, ஆண்கள் அப்படிதான் இருப்பார்கள், அவர்களை அனுசரித்து போக வேண்டும் என்ற பேச்செல்லாம் இப்போது எடுபடாது.

மேலும் படிக்க | உங்கள் காதலர் அவர் Ex-உடன் நட்பாக இருந்தால் வரும் 8 பிரச்சனைகள்!! உஷாரா இருங்க..

5 காரணங்கள்

ஆண்கள் தவறு செய்தாலும் அது தவறுதான். அதை இயல்பான ஒன்றாக பார்ப்பதும் மிகப்பெரிய தவறுதான். அந்த வகையில் ஆண்கள் இதுபோன்று செய்வதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற காதலை தாண்டிய, திருமணத்தை தாண்டிய உறவில் (Extra Marital Affair) ஆண்கள் ஈடுபடுவதற்கு சொல்லப்படும் முக்கியமான 5 காரணங்களை இங்கு காணலாம். இதுபோன்ற காரணங்களை சொல்வதாலேயே இது சரியென ஆகிவிடாது. இருப்பினும் இதுபோன்ற செயலுக்கு பின் உள்ள உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான காரணங்களை புரிந்துகொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.  

- முதல் காரணம், பலரும் சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள். அதாவது, திருமணத்தை தாண்டிய உறவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் வந்தால் அதில் தயங்காமல் முன்னோக்கிச் செல்வார்கள். இவர்கள் மனைவியிடமோ, காதலியிடமோ மாட்டிவிடுவோமோ என்ற அச்சமே இருக்காது. 

- அடுத்து, ஒரே பார்ட்னருடன் உடல் சார்ந்த நெருக்கத்தில் இருப்பது பலருக்கும் அலுப்பை தரும் என கூறப்படுகிறது. இதனால்தான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சில ஆண்கள் உறவில் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அவர்களின் திருமண உறவை விடுத்து அதற்கு வெளியே உள்ள உறவுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க முனைவார்கள். 

- இன்னும் ஒரு சில ஆண்களுக்கு தன்னம்பிக்கை மிக மிக குறைவாக இருக்கும். அவர்கள் இதுபோன்ற திருமணத்தை தாண்டிய உறவில் இருக்க நினைப்பார்கள் என கூறப்படுகிறது. அதாவது, வேலையில் தோல்வியடைந்தவராக, தன்னம்பிக்கை அற்றவராக இருக்கும்பட்சத்தில் தனது நம்பிக்கையை அதிகரிக்க இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் இருப்பது 'கெத்து' என்று கூட நினைப்பவர்கள் இருக்கின்றனர். 

- அதேபோல், திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது பலருக்கும் உற்சாகத்தை தரும். இந்த உற்சாகம் தரும் போதைதான் அவர்களுக்கான ஆர்வத்தை தூண்டும். அன்றாட வாழ்வில் தொலைத்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் இதுபோன்ற திருமணத்தை தாண்டிய உறவின் மூலம் இவர்கள் பெற்றுக்கொள்ள நினைப்பார்கள். 

- திருமண உறவில் பிரச்னை இருந்தாலும் ஆண்கள் இதுபோன்ற திருமணத்தை தாண்டிய உறவை நாடிச் செல்வார்கள். காதல் வாழ்விலும் இது கதைதான். பார்ட்னர் அவரை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திருப்திகரமாக வைத்திருக்கவில்லை என அவர்கள் நினைக்கும்பட்சத்தில் வேறொரு உறவை வேண்டுகிறார்கள். 

மேற்கூறிய 5 காரணங்களுக்கு சிலருக்கு சிறுபிள்ளைத்தனமாகவும், வேடிக்கையாகவும் தோன்றலாம். இன்னும் சிலருக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் இருக்கலாம். இருப்பினும் முன்னர் கூறியது போல் இந்த காரணங்களை கூறுவதால் திருமணத்தை தாண்டிய உறவு சரி, தவறு என இங்கு வலியுறுத்த முற்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதுகுறித்த பிரச்னைகளுக்கு உடனே அதற்குரிய வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முதல் இரவில் தம்பதிகள் என்னெல்லாம் பண்ணலாம்? சூப்பரான 5 ஐடியாக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News