நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை வழிமுறை!!

முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.

Last Updated : Oct 11, 2018, 09:24 AM IST
நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை வழிமுறை!! title=

முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, வருகிற 19-ம் தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள். 

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை :-

தேவி : வராகி தேவி

மலர் : செவ்வரளி,

நைவேத்தியம்: புளியோதரை,

திதி : துவிதியை

கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்,

ராகம் : கல்யாணி ராகம்.

Trending News