ஓய்வூதியத் திட்டம்: பெண்களுக்கு மாதந்தோறும் 2250 ரூபாய் உதவித்தொகை

மோடி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதன் கீழ் அனைத்து வகுப்பு மக்களுக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2022, 07:52 AM IST
  • விதவை ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்
  • ஹரியானா வித்வா பென்ஷன் யோஜனா
  • உத்தரப் பிரதேசம் வித்வா பென்ஷன் யோஜனா
ஓய்வூதியத் திட்டம்: பெண்களுக்கு மாதந்தோறும் 2250 ரூபாய் உதவித்தொகை title=

மோடி அரசு மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதன் கீழ் அனைத்து வகுப்பு மக்களுக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் அத்தகைய திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். அதில் நாட்டின் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கப்படுகிறது. அரசின் இந்த திட்டத்தில், மாநிலத்திற்கு ஏற்ப தொகை மாறுபடும்.

விதவை ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்
இன்று நாங்கள் உங்களுக்கு அரசாங்கத்தின் விதவை ஓய்வூதியத் திட்டம் பற்றி கூற உள்ளோம். இதில் நிதி ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு அரசாங்கம் உதவுகிறது, இதன் கீழ் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சமாளித்து ஓட்ட முடியும். இதனால் விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ 

யாருக்கு பலன் கிடைக்கும்?
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இது தவிர, விண்ணப்பப் பெண் அரசின் வேறு ஏதேனும் ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டால், அவர் அதைப் பயன்படுத்த முடியாது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஹரியானா வித்வா பென்ஷன் யோஜனா
ஹரியானா அரசு மாதம் 2250 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ 200000 உள்ள பெண்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உத்தரப் பிரதேசம் வித்வா பென்ஷன் யோஜனா
இந்த திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச அரசு, பெண்களுக்கு மாதம் ரூ.300 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், ஓய்வூதியத் தொகை நேரடியாக கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் மாற்றப்படும்.

இது தவிர மற்ற மாநிலங்களைப் பற்றி பேசினால், மகாராஷ்டிரா விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.900, ராஜஸ்தான் விதவை ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் ரூ.750, டெல்லி விதவை ஓய்வூதியத் திட்டத்தில் காலாண்டுக்கு ரூ.2500, குஜராத் விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1250, உத்தரகாண்ட். விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1200 வழங்கப்படுகிறது.

என்ன ஆவணங்கள் தேவைப்படும்
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, கணவர் இறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்றிதழ், வயதுச் சான்று, வங்கிக் கணக்குப் புத்தகம், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இபிஎஃப்ஒ-விலிருந்து இபிஎஃப்ஓ டிரஸ்டுக்கு கணக்கை மாற்றுவது எப்படி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News