நினைத்ததை முடிப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்: உங்களுக்கும் இந்த ராசியா?

Astrology: அதிகப்படியான பிடிவாத குணம் கொண்ட இந்த ராசிக்காரர்கள், தாங்கள் நினைத்ததை முடித்த பிறகுதான் நிம்மதியாக இருப்பார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2022, 01:27 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள், துணிச்சல் மிக்கவர்கள்.
  • மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள்.
  • துலா ராசிக்காரர்களுக்கு எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
நினைத்ததை முடிப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்: உங்களுக்கும் இந்த ராசியா? title=

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், மனிதர்களின் இயல்புகளையும் குணாதிசயங்களையும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். ஒருவரது ராசி, ஜாதகம், நட்சத்திரம் ஆகியவற்றின் மூலம் அவரது எதிர்காலம் மட்டும் அல்லாமல், அவரது தனிச்சிறப்பு வாய்ந்த குணங்களையும் தெரிந்துகொள்ளலாம். 

எந்த சூழ்நிலை வந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் யாருக்கு இருக்கும், யார் எளிதில் விட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற விவரங்களையும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். அதிகப்படியான பிடிவாத குணம் கொண்ட இந்த ராசிக்காரர்கள், தாங்கள் நினைத்ததை முடித்த பிறகுதான் நிம்மதியாக இருப்பார்கள். மிகவும் பிடிவாத குணம் கொண்ட இத்தகைய ராசிக்காரர்கள், தாங்கள் எடுத்த வேலையை முடித்த பிறகுதான் மூச்சு விடுவார்கள். இவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெற்றி பெறும் அந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்

மேஷம்:

இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவரது இந்த இயல்பு அவரது வாழ்க்கையில் மிகவும் உதவுகிறது. அவர்கள் நிர்ணயித்த இலக்கை, அதை அடைந்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு அவர்களை பயமற்றவர்களாகவும் தைரியமாகவும் ஆக்குகிறது, இது அவர்கள் வெற்றிகரமாக இருக்க உதவுகிறது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்தவொரு இலக்கையும் அடைய கடினமாக உழைக்க அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அவர்களுடைய இந்த குணத்தால்தான் அனைவரும் அவர்கள் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். துலா ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் எளிதாக உயர் பதவிகளை அடைவார்கள். 

மேலும் படிக்க | சிவராத்திரியில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிவன் அருள் கிடைக்கும்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், சொஞ்சம் சுயநலவாதிகள். அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம், இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். விருச்சிக ராசிக்காரர்களுடன் போட்டி போடுவது எளிதல்ல. இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொதுவாக அதிகப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். 

மகரம்: மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். முடிவெடுத்த வேலையை முடித்தால்தான் இவர்களால் இயல்பாக இருக்க முடியும். இவரின் இந்த குணத்தால் தான் எந்த துறைக்கு சென்றாலும் இவர்களால் அதிக முன்னேற்றத்தை அடைய முடிகிறது. இவர்கள் செய்யும் செயல்களுக்கு நல்ல பலனும் நிச்சயமாக கிடைக்கிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Venus Transit: சுக்ரனின் ராசி பரிவர்த்தனையால் அமோகமாய் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News