சனி பெயர்ச்சி, இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசியினருக்கு நிதி நிலை மேம்படும்

ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, ​​​​அதன் தாக்கம் நபரின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். இதன் விளைவு சுப பலனையும் தரலாம் அசுப பலனையும் தரலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2022, 02:33 PM IST
  • சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலை மேம்படும்.
சனி பெயர்ச்சி, இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசியினருக்கு நிதி நிலை மேம்படும் title=

ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, ​​​​அதன் தாக்கம் நபரின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். இதன் விளைவு சுப பலனையும் தரலாம் அசுப பலனையும் தரலாம். இந்த மாதம் ஏறக்குறைய அனைத்து கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றிவிட்டதால், வரும் ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார். கிரக இயக்கத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி இந்த சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் அளிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 முதல் நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது. மேஷ ராசியின் 11ம் பாகத்தில் சனி பகவான் மாறப்போகிறார். இது லாபம் மற்றும் வருமானம் தரும் இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் லாபம் பெறலாம். ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்க முடியும். சனி பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகக் கருதப்படுவதால் இந்த நேரத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு வரலாம். மேலும், சுப பயணம் மேற்கொள்ளலாம். பழைய நோய்களில் இருந்து விடுபடலாம். மொத்தத்தில் இந்த சிறப்பன பலன் தரும்.

ரிஷபம் - ஜோதிடத்தின் படி சனி கிரகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் பெயர்ச்சி ஆகும். இது வேலை மற்றும் தொழில் செய்யும் இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். சனி சஞ்சரித்தவுடன் உங்களுக்கு மரியாதையும் கவுரவமும் கிடைக்கும். மூத்தவர்களின் ஆதரவைப் பெறலாம்.

தனுசு: சனிபகவானின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. சனி சஞ்சரிக்கும் போதே இந்த ராசிக்காரர்களுக்கு எழரை சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சனி இந்த ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, இந்த காலகட்டத்தில் பலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். சனிப்பெயர்ச்சியின் போது பழைய நோய்களில் இருந்து விடுபடலாம். சனி கிரகம் சம்பந்தமான எந்த வேலையும் செய்தால் வெற்றி கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். மேலும், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் ஆதரவைப் பெறுவார்கள்.

 (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News