சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள்

ஏப்ரல் 7ம் தேதி செவ்வாய் ராசி மாறப் போகிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 7 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 30, 2022, 09:21 PM IST
  • வேலை தடைபடலாம்
  • குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்
  • கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் நெருப்பு கிரகம். கிரகத்தின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், ஆற்றல் மற்றும் தைரியத்தின் காரணியாக கருதப்படுகிறது. 

ஏப்ரல் 7ம் தேதி செவ்வாய் ராசி மாறப் போகிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 7 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் அதிகரித்து அவர்களை சீரழிக்கும்.  

கும்ப ராசியில் ஏப்ரல் ஏழாம் தேதி செல்லும் சனி, அங்கு மே 17, 2022 வரை சஞ்சரிப்பார். சனியின் ராசியான கும்பத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது பல ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அசுபமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும் 

கடகம்: ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கடகத்தில் வலுவிழந்துள்ளது. செவ்வாய் மாற்றத்தால் வாழ்க்கையில் எல்லாவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வரும். செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது, ​​பணியிடத்தில் கூடுதல் பணி அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சிறு சிறு வாக்குவாதங்களையும் சந்திக்க நேரிடும். தந்தையுடன் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.  

சிம்மம்: இந்த செவ்வாய் சஞ்சாரத்தின் போது பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புணர்வு ஏற்படுவதால் மனம் அலைக்கழிக்கப்படும். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படும். உத்யோகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது. பயணத்தின் முழு காலத்திலும் ஒருவர் ஒருவித மன உளைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து மோதலும், கசப்பான வாக்குவாதங்களும் ஏற்படும். 

சிலருக்கு குடும்பத்திலிருந்து பிரியும் சூழ்நிலையும் ஏற்படலாம்ம். வருமான ஆதாரங்கள் குறையும். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சனி, செவ்வாய் சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனை

துலாம்: செவ்வாய் சஞ்சாரத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை ஏற்படலாம். பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் சிக்கல் ஏற்படலாம். தற்போது சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். வேலையை மாற்றும் முடிவை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம்: திருமண வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். பணிபுரியும் இடத்தில் பங்குதாரருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படலாம். குடும்ப சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். கூட்டுத் தொழிலால் பண இழப்பு ஏற்படும்.

மகரம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதல் பணிச்சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்படலாம். பயணத்தின் போது வேலைகளை மாற்றுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில பொருளாதார இழப்புகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீனம்: செவ்வாய் சஞ்சாரத்தால் செலவுகள் அதிகரிக்கும். மேலும் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். செவ்வாயின் சஞ்சார காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம், குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News