கிரகணம் எதிரோலி!! ஜூலை 27 திருப்பதி கோயில் நடை 11 மணி நேரம் அடைக்கப்படும்

நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி திருப்பதி கோயிலில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த கிரகனமானது நாளை இரவு 11.54 மணிக்கு தொடங்கி 28ம் தேதி அதிகாலை 3.49 மணி வரை நிகழ்கிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2018, 07:57 PM IST
கிரகணம் எதிரோலி!! ஜூலை 27 திருப்பதி கோயில் நடை 11 மணி நேரம் அடைக்கப்படும் title=

நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி திருப்பதி கோயிலில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த கிரகனமானது நாளை இரவு 11.54 மணிக்கு தொடங்கி 28ம் தேதி அதிகாலை 3.49 மணி வரை நிகழ்கிறது. 

இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மாலை 5 மணி முதல் 28ம் தேதி காலை 4.15 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 

இந்நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி நாளை நடைபெற இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் பவுர்ணமி அன்று நடைபெறக்கூடிய கருட சேவையும் ரத்து செய்யப்படுகிறது.  இதேபோல், நாளை மாலை 5 மணி முதல் 28ம் தேதி காலை 9 மணி வரை அன்னப் பிரசாத கூடமும் மூடப்படவுள்ளது.

Trending News