"செக்ஸ்" கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்குமா? இந்த கேள்விக்கான பதில் தெரிந்துக்கொள்ளுங்கள்

சீனாவில் இருந்து உலகிற்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் பல வகையான வதந்திகள் வெளிவருகின்றன. அதே நேரத்தில், கொரோனாவைத் தடுக்க WHO தனது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 18, 2020, 09:16 PM IST
"செக்ஸ்" கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்குமா? இந்த கேள்விக்கான பதில் தெரிந்துக்கொள்ளுங்கள் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியா உள்ளிட்ட உலகில் வேகமாக அதிகரித்து வருகிறது. இது பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் குறித்து பலருக்கு வகையான சந்தேகமும் எழுந்துள்ளது. அத்தகைய ஒரு சந்தேகம் தான் பாலியல் தொடர்பால் கொரோனா நோய்த்தொற்றை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

WHO கொரோனாவில் ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது:
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவைத் தடுப்பது குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கான தடுப்பு, அறிகுறிகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக, WHO அதன் சார்பாக பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயைத் தவிர்க்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கைகளைக் கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நபரையும் சந்திக்கும் போது ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்று WHO கூறுகிறது.

கொரோனாவின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் போன்ற பிரச்சினைகள் இந்த நோயின் அறிகுறிகள் என்று WHO கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுபோன்ற சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரிடம் சென்று உங்களை பரிசோதனை செய்துக்கொள்ளவும்

செக்ஸ் கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்குமா?
இதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அதை உறுதியுடன் "ஆம்" என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, நோய்த்தொற்று பாலினத்தினால் ஏற்பட்டதா? என்பது தெளிவாக எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த வைரஸால் சிக்கிய எந்தவொரு நபரிடமிருந்தும் தூரத்தை பாரமரிப்பது இங்கே நினைவில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுடன் அதிகம் நெருங்க வேண்டாம். அவர்களை அரவணைக்க வேண்டாம். 

இருமல் மற்றும் தும்மினால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், அத்தகைய நபர்களுடன் நெருக்கமாக இருப்பது, உங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதை எங்களுக்கு நினைவுப் படுத்துகிறோம். எனவே கொரோனோ வைரஸில் இருந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்துங்கள்.

Trending News