Mutual Funds: ஒரு நாளைக்கு ₹50 சேமித்தால் போதும் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

பரஸ்பர நிதியங்களில்  திட்டமிட்டு செய்யும் நீண்ட கால முதலீட்டில், நீங்கள் எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2021, 10:43 AM IST
  • மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் முதலீட்டில் அதிக லாபம்.
  • ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமிப்பதன் மூலம் நீங்கள் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்
  • விரைவில் SIP திட்டம் ஒன்றில் சேர்ந்து முதலீட்டை தொடங்கவும்.
Mutual Funds: ஒரு நாளைக்கு ₹50  சேமித்தால் போதும் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் title=

How to become Rich: முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் நீங்களும் ஒரு கோடீஸ்வரர் ஆகலாம். இதற்காக, நீங்கள் ஒரு பெரிய தொகையை சேமிக்க தேவையில்லை, ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமித்து, நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகலாம்.

ஒரு கோடீஸ்வரர் ஆக முதலாவதாக, முதலீட்டை இளம் வயதில் சீக்கிரம் தொடங்க வேண்டும். உலகின் அனைத்து வெற்றிகரமான நபர்களை கவனித்தால், அதில் பெரும்பாலானோர், மிக இளம் வயதிலேயே முதலீடு செய்வதற்கான தந்திரங்களைக் கற்றுக்கொண்டவர்கலாக இருப்பார். வாரன் பஃபே இதற்கு மிகப்பெரிய உதாரணம். 11 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினார். அவரது முதலீட்டு தொடர்பான யோசனைகள் இன்று உலகம் முழுவதும் முதலீடிற்கான குரு மந்திரமாக கருதப்படுகிறது. இரண்டாவதாக, நீண்ட காலத்திற்கு பொறுமையுடன் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். 

பரஸ்பர நிதியத்தின் SIP  திட்டம் 

கோடீஸ்வரர் ஆவதற்கான முதல் சூத்திரம் சிறு வயதிலிருந்தே சேமிப்பு மற்றும் முதலீட்டைத் தொடங்குவதாகும். ஏனென்றால் நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகம் லாபம் சம்பாதிக்க முடியும். SIP அதாவது மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) முறையான முதலீட்டுத் திட்டம் மூலம் எப்படி ஒரு கோடீஸ்வரர் ஆவது என்பதை பார்க்கலாம்.

25 வயதில் முதலீடு 

உங்களுக்கு 25 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம், ஒரு நாளைக்கு ரூ.50  சேமித்து, அதை SIP மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யத் தொடங்கினீர்கள். எனவே 60 வயதிற்குள் நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். அதாவது,  35 வருடங்கள், தினமும் 50 ரூபாய் மட்டுமே சேமிப்பதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய தொகையை சேகரிக்க முடியும். அதாவது, ஒரு நாளைக்கு ரூ .50 சேமிப்பதன் மூலம், ஓய்வு பெறும் வயதில் நீங்கள் 1.1 கோடிக்கு உரிமையாளராகிவிடுவீர்கள்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்றால் 50X30 = மாதம் 1500 ரூபாய்.
மியூச்சுவல் பண்ட்  முதலீடு ராசரியாக 12-15 சதவிகிதம் வருமானம் அளிக்கிறது
35 வருட நீண்ட முதலீட்டு காலத்தில் உங்களுக்கு 12.5% ​​வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம்

SIP தொகை 1500/மாதம்
மதிப்பிடப்பட்ட வருமானம் 12.5%
முதலீட்டு காலம் 35 ஆண்டுகள்
மொத்த முதலீடு ரூ.6.3 லட்சம்
நிகர மதிப்பு ரூ 1.1 கோடி

30 வயதில் முதலீடு 

இப்போது நீங்கள் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே உங்கள் முதலீட்டின் காலம் 30 ஆண்டுகளாகக் குறையும். 

SIP தொகை 1500/மாதம்
மதிப்பிடப்பட்ட வருமானம் 12.5%
முதலீட்டு காலம் 30 ஆண்டுகள்
மொத்த முதலீடு ரூ 5.4 லட்சம்
நிகர மதிப்பு ரூ.59.2 லட்சம்

அதனால், எவ்வளவு சீக்கிரம் முதலீட்டை தொடக்குகிறோமா அவ்வளவு அதிகமாக பலன்களை பெறலாம், 

Trending News