ஏ.என்.ஆர் விருது எஸ்.எஸ். ராஜமவுலிக்கு வழங்கபட உள்ளது...

Last Updated : Sep 9, 2017, 06:21 PM IST
ஏ.என்.ஆர் விருது எஸ்.எஸ். ராஜமவுலிக்கு வழங்கபட உள்ளது... title=

பழம்பெறும் நடிகர் அக்னினேனி நாகேஸ்வரராவ் அறக்கட்டளையின் சார்பில் அவர்களுக்கு ஏஎன்ஆர் (அக்னினேனி நாகேஸ்வர ராவ்) விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவரின் மகனும் நடிகருமான நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பில் வழங்கி வருகிறார்.

இதுவரை ஏ.என்.ஆர் விருது பெற்றவர்கள் இந்தி நடிகர் தேவ் ஆனந்த், சபானா ஆஸ்மி, அஞ்சலிதேவி, வைஜயந்திமாலா, பாடகி லதா மங்கேஷ்கர், கே.பாலச்சந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப்பச்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதை பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலிக்கு வழங்கப்பட உள்ளது.

ஐதராபத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகா மன்றத்தில் நடைபெறுகிறது. வருகிற 17ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

இந்த விருது வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு விருதை வழங்குகிறார். விழாவில் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை நடிகர் நாகார்ஜுனா செய்து வருகிறார்.

Trending News