பிரபல நடிகர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு..! காரணம் என்ன..?

நடிகராகவும் சண்டை பயிற்சியாளராகவும் வலம் வரும் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2023, 04:10 PM IST
  • தென்னிந்திய திரையுலகின் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்.
  • தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
  • இவர் மீது நாகர்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு..! காரணம் என்ன..?  title=

90களில் இருந்து பிரபல துணை நடிகராகவும் வில்லன் நடிகராகவும் வலம் வருபவர், கனல் கண்ணன். நடிகராக மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரையுலகிலும் இவர் பிரபல சண்டை கலைஞராக வலம் வருகிறார். இவர் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கனல் கண்னன்:

தமிழின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜய், விக்ரம் போன்ற பல ஹீரோக்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றுபவர், கனல் கண்ணன். தான் வேலை பார்க்கும் படங்களில் சிறிய கதாப்பாத்திரத்திலும் வருவார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்கள் மட்டுமன்றி சில இந்தி படங்களிலும் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார். இவர், இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் எதையாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். 

மேலும் படிக்க | ‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..!

சர்ச்சையில் சிக்கிய கனல் கண்ணன்..

கனல் கண்ணன், இந்து மதத்திற்கு ஆதரவாக மேடை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றில் பேசிவந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், இவர் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளை இழிவு படுத்தும் வகையில் இருந்ததாக கூறி இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

போலீஸார் வழக்குப்பதிவு..

கனல் கண்ணன் கிருஸ்தவர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதை அடுத்து இவர் மீது சிலர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகரான ஜோசப் பெனடிக்ட் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். இதையடுத்து நாகர்கோவில் போலீசார் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர், சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதனால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இறப்பதற்கு முன்பு கடைசி ஆசையை தெரிவித்த பிரபல நடிகை..! அப்படியென்ன ஆசை..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News