கொடி திரைப்படத்திற்கு பின் மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ்!

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Mar 21, 2019, 04:18 PM IST
கொடி திரைப்படத்திற்கு பின் மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ்! title=

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வடச்சென்னை, மாரி-2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து தற்போது நடிகர் தனுஷ் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், தனுஷின் இத்திரைப்படத்தையும் இயக்கவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக இவர்கள் கூட்டணியில் கொடி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் தனுஷ் 2 வேடங்களில் நடித்தார். இப்போது, துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷ் உடன் இணைந்துள்ளார். இதிலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

அப்பா, மகன் என்ற இரு கதாப்பாத்திரங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். அப்பா கதாப்பாத்திரத்தில் பிளாஷ் பேக்கில் வரும் தனுஷ், நிகழ்காலத்தில் வரும் தனுஷ் என இரண்டு தனுஷ். அப்பா தனுசுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். புதுப்பேட்டைக்கு பிறகு சினேகா தனுசுடன் இணைகிறார். 

மகன் தனுசுக்கு ஹிரோயின் தேடி வருகிறார்கள்.  படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என தெரிகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். 

Trending News