பொன்னியின் செல்வன் வெற்றி: மணிரத்னதுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த அன்பு பரிசு

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலிஸூக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த அன்பு பரிசு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 2, 2022, 10:43 AM IST
  • பொன்னியின் செல்வன் வெற்றி
  • ஐஸ்வர்யா ராய் ரியாக்ஷன்
  • மணிரத்னத்துக்கு கொடுத்த பரிசு
பொன்னியின் செல்வன் வெற்றி: மணிரத்னதுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த அன்பு பரிசு title=

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திரைவடிவம் பெற்ற இந்தப் படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது, ஆங்காங்கே சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கல்கியின் நாவலை படமாக கொண்டு வந்ததில் வெற்றியை நாட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆயிரக்கணக்கானோர் வாசித்து, தங்களின் கற்பனை சிறகுகளில் உருவாக்கி வைத்திருந்த வந்தியதேவன், குந்தவை, நந்தினி, பழுவேட்டரையர்களுக்கு இப்போது உருவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

புனைவு கதை என்றாலும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை தாங்கி வந்திருக்கும் படம் என்பதால் இயல்பாகவே தமிழ் ரசிகர்களின் ஆவலுக்குரிய படமாக மாறியிருக்கிறது பொன்னியின் செல்வன். வந்தியதேவன், ஆதித்ய கரிகாலன் முதல் நந்தினி, குந்தவையாக கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வாழ்ந்திருக்கின்றனர். இதுவே படத்தின் பாதி வெற்றிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' - எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... மதுரையில் கலகலப்பு

நேற்று வெளியான இந்தப் படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.பார்த்திபன் ஏற்கனவே மணிரத்னத்திடம் இருந்து பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றுவிட்டார். தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ் குமரன் ஆகியோர் இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். 

இந்நிலையில், தன்னுடைய கதாப்பாத்திரத்துக்கு உலகம் முழுவதும் இருந்து கிடைத்திருக்கும் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் கண்டு மகிழ்ச்சியில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னத்துக்கு தன் இதயத்தில் இருந்து நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த அன்பை வெளிக்காட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டின்போதே இயக்குநர் மணிரத்னம் என்னுடைய குரு என குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராய். 

மேலும் படிக்க | முதல் நாளே 100 கோடி அருகில் - பொன்னியின் செல்வன் மெகா வசூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News