அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா பதிலடி..செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம்

Amudhavum Annalakshmiyum Today's Episode Update: அமுதா கொடுத்த பதிலடி.. செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 6, 2023, 11:42 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா பதிலடி..செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா நாமினேஷன் தாக்கல் செய்ய பழனி, உமா அதிர்ச்சி அடைகின்றனர். 

மேலும் படிக்க | சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு!

பழனி நிர்வாகத்திடம் அமுதா கையெழுத்தா அல்லது கைநாட்டான்னு கேட்டு சொல்லுங்க என நக்கலடிக்க அமுதா பழனியிடம் எனக்கு கதிரேசன் மாமா ஆசிர்வாதம் இருக்கு, நான் ஜெயிக்குறதுக்கு அது ஒண்ணு போதும் என பதிலடி கொடுக்கிறாள். 

அடுத்து சிதம்பரத்தை செந்திலும் அமுதாவும் சந்திக்க செந்தில் சிதம்பரத்திடம் என்னை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஒரு உதவி வேணும் என கேட்க குமரேசன் குடும்பம் பள்ளிக் கூடத்தை அபகரிக்க முயற்சி பண்றாங்க.. அமுதா கரஸ் பதவிக்கு போட்டி போடுறா , நீங்க அவளுக்கு ஆதரவு குடுக்கனும் என கேட்கிறான். 

மேலும் நான் அந்த ஸ்கூல்ல மெம்பரா இருக்கேன், ஆனா அவங்க நடந்துக்குற விதம் எனக்கு பிடிக்காததுனால நான் எதுலயுமே கலந்துக்குறது கிடையாது என சொல்ல, ஒரு ஓட்டால அது கெட்டவங்க கைக்கு போயிடக் கூடாது என செந்தில் சொல்லிவிட்டு நகர்கிறான். 

அதன் பிறகு மாணிக்கம் அன்னலட்சுமியிடம் மாப்பிள்ளை எங்க ரெண்டு நாளா ஆளைக் காணோம் என கேக்க, செந்தில் இருமுடி கட்டுடன் வருகிறான்.  தான் சபரிமலைக்கு சென்று வந்து விட்டதாக சொல்ல அமுதாவுக்கு எலக்‌ஷன் வேலை எல்லாம் பார்க்கனும்ல அதான் 48 நாள் விரதத்தை 4 நாள்ல முடித்துவிட்டேன் என சொல்கிறான். 

அதோடு விரதம் முடிஞ்சது முதலிரவுக்கான ஏற்பாட்டை பண்ணுமாறு சொல்கிறான். அடுத்து செந்தில் அமுதா அருகே வர, அவள் சாமியே சரணம் ஐயப்பா என நகர்கிறாள்.  செந்தில் அவளிடம் மாலையை கழட்டி வச்சிட்டு சாமியா இருந்த நான் ஆசாமியா வர்றேன் என சொல்லி செந்தில் சாமி முன் மாலையை கழற்றி வைக்கிறான்‌. 

அப்போது அன்னம் பழனி மலை முருகனுக்கு அரோகரா என சொல்ல, செந்தில் முழிக்க, மாணிக்கம் உன் கழுத்துல பாரு, முருகனுக்கு மாலை போட்டாச்சு என சொல்ல, செந்தில் பார்க்க, அவனுக்கு பழனிமலை செல்வதற்கான மாலை போடப்பட்டு இருக்கிறது. 

இதனால் செந்தில் ஷாக்காக அமுதா அவனை பார்த்து புன்னகைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வீட்டு வாசலுக்கு சென்ற ரசிகர்! விக்ரம் செய்தது என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News