பரபரப்பில் அண்ணா சீரியல்: காலம் போன வயசுல அந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா?

Anna Serial Today Episode: இசக்கியை பார்க்க ஆசைப்படும் சூடாமணி.. வைகுண்டம் முடிவால் டென்ஷனாகும் சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2024, 03:02 PM IST
பரபரப்பில் அண்ணா சீரியல்: காலம் போன வயசுல அந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா?  title=

Zee Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்குள் வந்த சூடாமணி பரணியும் சண்முகமும் அன்னோன்யமாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது அடுத்த நாள் காலையில் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யும் சூடாமணி தனது கையால் சமைத்து பரிமாற அதை சாப்பிட்டு பார்த்த கனி அப்படியே இசக்கி அக்கா சமைச்ச மாதிரியே இருக்கு என்று சொல்ல வைகுண்டம் இசக்கி மாதிரி இவங்க சமைக்கல இவங்கள மாதிரி தான் இசக்கி சமைக்கிறா என்று சொன்னதும் வீடு பரபரப்பாகிறது. 

சூடாமணி தான் அம்மா என்ற உண்மை தெரிய வந்து விடுமா என்ற பரபரப்பு எகிற சண்முகம் நிலைமையை சமாளிக்கிறான். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட்ட முடித்த பிறகு வைகுண்டம் கடையிலிருந்து நெத்திலி மீன் குழம்பு வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் சூடாமணிக்கு ஊட்டி விட இதை வெட்டுக்கிளி பார்த்து விடுகிறான். 

மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் சீரியல்: அனைவரும் ஷாக்.. அனைவரும் அதிர்ச்சி.. நடக்க போவது என்ன?

காலம் போன போக்குல இந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா என்று திட்டிவிட்டு பரணி சண்முகத்திடம் விசயத்தை சொல்ல கிளம்பி செல்கிறான். சூடாமணி இசக்கியை பார்க்க ஆசைப்பட வைகுண்டம் அதற்கான ஏற்பாடு செய்வதாக சொல்லி சவுந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறார். இசக்கிக்கு பூ எடுக்கணும் என்று சொல்ல எதிர்பாராத விதமாக முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டி சம்மதம் சொல்ல வைகுண்டம் சந்தோஷமாகிறார். 

அதன் பிறகு வெட்டுக்கிளி, பரணி மற்றும் சண்முகத்திடம் வந்து வைகுண்டம் சூடாமணிக்கு சாப்பாடு ஊட்டிய விஷயத்தைப் பற்றி சொல்ல இவர்கள் வெட்டுக்கிளிக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகின்றனர். பிறகு காலம் போன வயசுல அந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்க சண்முகம் பரணி அது வைகுண்டத்தோடு செட்டப் என்று சொல்கின்றனர். 

பிறகு பாக்கியம் பரணிக்கு போன் போட்டு இசக்கிக்கு பூ எடுக்கும் விஷயத்தை சொல்ல சண்முகம் அப்பா எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று டென்ஷன் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க - 11 வருடங்கள் கழித்து ரிலீஸாகும் ‘மத கஜ ராஜா’ திரைப்படம்! எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News