அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்த லிங்குசாமி

செக் மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இயக்குநர் லிங்குசாமி அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 05:11 PM IST
  • சிறை தண்டனையில் இருந்து தப்பித்த லிங்குசாமி
  • நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தினார்
அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்த லிங்குசாமி  title=

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி, விஷால், சூர்யா மற்றும் அஜித் உள்ளிட்ட நட்சத்திர திரைபிரபலங்களை இயக்கிய அவர், செக் மோசடி வழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டபட்டு நீதிமன்றம் மூலம் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து எண்ணி எழு நாள் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த லிங்குசாமி, தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மூலம் பிவிவி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் 1.3 கோடி கடனாக பெற்றுள்ளார். இதன்பிறகு கடனை செலுத்தாத அவர், கடனுக்கு காசோலை ஒன்றை கொடுத்துள்ளார்.

 ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிவிவி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.   

அபராதம் செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவான நிலையில், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை திரும்ப செலுத்தி தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வரும் அவர் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள லிங்குசாமி, இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து வழக்கை சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மேலும் படிக்க | ஆர்யாவின் கேப்டன் - வெளியானது ட்ரெய்லர்... எகிறும் எதிர்பார்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News