விவசாயிகள் நன்றாக இல்லை: நடிகர் விஜய் வேதனை

-

Last Updated : Jun 12, 2017, 09:38 AM IST
விவசாயிகள் நன்றாக இல்லை: நடிகர் விஜய் வேதனை title=

சென்னையில் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்:-

நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இல்லை என வேதனை தருகிறது. வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயப் பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல. அவசரமாகவும் தீர்வு வேண்டும்.

மூன்று வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. அரிசியை உற்பத்தி செய்து விட்டு அதனை இலவசமாக வாங்குவதற்காக விவசாயிகள் ரேஷன் கடை வரிசையில் நிற்பதாக வேதனை தெரிவித்தார்.

இப்போதெல்லாம் ஆரோக்கியம் இல்லாத உணவு தான் கிடைக்கிறது. அடுத்த சந்ததிக்கு இதுவும் இல்லாத நிலையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக கூறினார்.

Trending News