கார்த்திகை தீபம்: பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன

Karthigai Deepam: நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2024, 01:47 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன?
கார்த்திகை தீபம்: பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது தீபா பாடுவதற்கு தயாராக திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து இங்கே பாம் இருப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். 

மேலும் படிக்க | இது எனக்கு மறக்க முடியாத நாள்! நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!

இளையராஜா ஏற்கனவே நாங்கள் இரண்டு முறை எல்லாத்தையும் சோதனை செய்து தான் இங்கே கச்சேரியை ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று சொல்லியும் அவர்கள் எங்களுக்கு தகவல் வந்திருக்கு எங்களது வேலை செய்ய விடுங்க எல்லாரும் வெளியே போங்க என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் முழுவதும் சோதனை இடுகின்றனர்.

ஆனால் கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க கார்த்திக் நீங்க பாடுங்க தீபா எல்லாரும் கண்டிப்பா வருவாங்க என்று சொல்லி பாட உட்கார வைத்து இளையராஜாவிடம் ஸ்பீக்கரை வெளியே வைக்க சொல்கிறான். 

அதன் பிறகு தீபா பாடத் தொடங்க இந்த குரலுக்கு தானே எல்லாரும் வந்திருந்தோம் என்று வெளியே சென்ற அனைவரும் மீண்டும் உள்ளே வர தொடங்குகின்றனர். தீபா டிவியில் பாடுவதை பார்க்க அபிராமி அருணாச்சலம் ஆகியோரும் சந்தோஷப்படுகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்.. எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News