வெற்றியை அடக்க ஷக்தி செய்த காரியம்..! மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2023, 11:27 AM IST
  • மீனாட்சி பொண்ணுங்க தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களுள் ஒன்று.
  • இதில், பல நாட்களாக விறுவிறுப்பான திருப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.
  • இன்றைய எபிசோடில் நடக்க இருப்பது என்ன..?
வெற்றியை அடக்க ஷக்தி செய்த காரியம்..! மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் மிகவும் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மகளிர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்தவை..

இதுவரை நடந்த எபிசோடில், நீதிமணியை கண்டுபிடிக்க வெற்றி, புஷ்பா இருவரும் பேப்பரில் விளம்பரம் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வீட்டிற்கு வரும் சங்கிலி பேப்பரில் சண்முகம் சீரியஸாக இருக்கும் செய்தியை புஷ்பாவிடம் காட்ட புஷ்பா டென்ஷன் ஆகிறாள். அடுத்ததாக வெற்றி, மீனாட்சி என இருவரும் நீதிமணி தங்கி இருக்கும் கோவிலுக்கு சென்று நீதிமணியை சந்தித்து வீட்டிற்கு அழைக்க நீதிமணி வர மறுக்கிறான். 

மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!

பஞ்சாயத்தில் புஷ்பா நீதிமணியை மீனாட்சி கடத்தி இருப்பதாக நாடகமாடுகிறாள் என்று சொல்லியும் நீதிமணி வர மறுக்க மீனாட்சி, வெற்றி என இருவரும் அன்று இரவு அந்த கோவிலிலேயே தங்கி இருக்கின்றனர்.  இந்த விஷயம் அறிந்து நீதிமணியை கடத்துவதற்கு திட்டம் போடும் சங்கிலி போர்வையில் தூங்கிக் கொண்டிருக்கும் வேறொரு ஆளை நீதிமணி என்று நினைத்து கடத்திச் செல்கிறான். கடத்திய ஆளை புஷ்பாவிடம் ஒப்படைத்து போர்வை விலக்க உள்ளே வேறு ஆள் இருக்க புஷ்பா டென்ஷனாகிறாள். வெற்றி, மீனாட்சி இருவரும் கோவிலில் இருந்து ஊருக்கு கிளம்புகின்றனர். இனி நடக்க இருப்பது என்ன? வாங்க பார்ப்போம். 

Meenakshi Ponnunga

இனி நடக்க இருப்பது..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாட்சிக்கு நல்லது செய்வதற்காக தான் நீதிமணி புஷ்பாவின் வீட்டில் இருக்கிறார் என்ற தகவலை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்றும் செல்லமாக சக்தி வெற்றியிடம் சண்டை போடுகிறாள்.

உன் அப்பாவை கண்டுபிடித்ததால் எனக்கு கிஸ் கொடு என்று கேட்டு, வெற்றி சக்தியிடம் ரொமான்ஸ் செய்கிறான். அடுத்ததாக அம்மாவைப் பற்றி தவறாக பேசிய இரண்டு இளைஞர்களை 'அடித்து வெளுக்கிறான். இதனால் மீனாட்சி வீட்டிற்கு வந்த வெற்றியை மீனாட்சி திட்டுகிறாள். இனி அடிதடி சண்டைக்கு போகக்கூடாது என்று சொல்கிறாள். மேலும் வெற்றியிடம் சக்தி அம்மா சொல்வது உண்மைதான்.. இனி நீ எந்த சண்டைக்கும் போடக்கூடாது என்று கோவிலில் சாமியிடம் வேண்டி, வெற்றியின் கையில் காப்பு கட்டி விடுகிறாள்.

Meenakshi Ponnunga

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்..! போலீசார் விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News