வெற்றியால் கோபமான சக்தி..சவால் விடும் புஷ்பா..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.   

Written by - Yuvashree | Last Updated : May 25, 2023, 12:53 PM IST
  • புஷ்பா மெஸ்ஸை இடிக்க முடியாத கோபத்தில் சவால் விடுகிறாள்.
  • சக்தி வெற்றியால் கோபமடைகிறாள்.
  • இன்றைய எபிசோடில் பல திருப்பங்கள் உள்ளது.
வெற்றியால் கோபமான சக்தி..சவால் விடும் புஷ்பா..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..! title=

தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது மீனாட்சி பொண்ணுங்க. மக்களின் மனங்களில் நம்பகமான இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள திருப்பங்கள் என்னென்ன தெரியுமா? 

முந்தைய எபிசோட்:

சக்தி வெற்றியிடம் மன்னிப்பு கேட்க பார்க்க அதன் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் நான் சும்மாதான் சொன்னேன் என்று சொல்லிவிட்டு ஜேசிபியின் முன்னால் சென்று நிற்கிறான். 

இதனால் வெற்றியை இடித்து தள்ளிவிட்டு வீட்டை இடிக்க சொல்லி ஜெசிபியிலிருக்கும் நபருக்கு புஷ்பா கட்டளையிட, சங்கிலி ஓடிவந்து நம் வீட்டை இடிப்பதற்கு ஜே சி பி வந்திருக்கு என்ற தகவலை சொல்ல, புஷ்பா காரில் வீட்டுக்கு கிளம்பி போகிறாள். 

புஷ்பா மீனாட்சி வீட்டிற்கு வருகிறாள். அங்கு நீதிமணி கசாயம் குடித்த அன்று ஏதேதோ பேப்பரில் கையெடுத்து போட்டு விட்டேன் என்று கூறுகிறார். வெற்றி இந்த வீட்டில் ஒரு செங்கல் உடைந்தாலும் உங்கள் வீட்டையை தரைமட்டமாக்கி விடுவேன் என்று புஷ்பாவை எச்சரிக்கிறான். வேறு வழியல்லாமல் புஷ்பா சக்தியிடம் சரணடைந்து உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று எச்சரிக்கிறாள். 

மேலும் படிக்க | New Movies: இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகவுள்ள புது திரைப்படங்கள்!

க்தி பூட்டிய மெஸ்சை புஷ்பாவையே திறக்க சொல்கிறாள். தூக்கி வீசிய பாத்திரங்கள் எல்லாம் அடியாட்களை வைத்து திரும்ப வைக்க சொல்கிறாள். சக்தி வெற்றிக்கு நன்றி கூறுகிறாள். ஆனால் வெற்றியோ இது என் கடமை எந்த பெண் பாதித்தாலும் நான் உதவி செய்வேன் மற்றபடி நமக்குள் இருக்கும் சண்டை அப்படியே இருக்கிறது என்று ஷாக் கொடுக்கிறான்.  மெஸ் இடிக்கப்பட்டதா? வெற்றை வைத்த ட்விஸ்ட் என்ன? அனைத்து கேள்விகளுக்கும் இன்றைய எபிசாேடில் விடை இருக்கிறது. 

Meenakshi Ponnunga

இன்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் வெற்றியை வைத்து என் வீட்டை இடிக்க சொன்னாயா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று புஷ்பா ஷக்தியிடம் சவால் விடுகிறாள்.

அதற்கு பிறகு நீதிமணியிடம் உன் பெண்களை நான் என்ன செய்கிறேன் என்று பார் என்னை விட்டுவிடு என்று நீயே என் காலில் விழுந்து கெஞ்ச போகிறாய் என்று அவனிடமும் சவால் விடுகிறாள்.

இதையடுத்து புஷ்பா மீனாட்சி வீட்டின் முன் மீண்டும் வந்து மீனாட்சி நான்கு நாளில் இங்கு வந்தாக வேண்டும் இல்லை என்றால் இந்த வீடு தப்பிக்காது என்று மீண்டும் மிரட்டுகிறாள். 

அப்போது வெற்றி அங்கே வர மீண்டும் என்ன பிரச்சனை செய்ய வந்தாயா என்று புஷ்பா கேட்க, வெற்றி இல்லை இல்லை என்று சொல்லிவிட்டு அன்று ஏதோ மூடில் செய்து விட்டேன்'' நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, சக்தி வெற்றியைப் பார்த்து கோபப்படுகிறாள். 

காணத்தவறாதீர்கள்..

இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Karthi Birthday: ரக்கட் பாய் பருத்திவீரன் டூ சாக்லேட் பாய் வந்தியத்தேவன்-கார்த்திக்கு ஏற்றம் கொடுத்த கதாப்பாத்திரங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News