உதவி கேட்ட சக்திக்கு வெற்றி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்!

Meenakshi Ponnunga Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : May 19, 2023, 11:38 AM IST
  • இன்றைய எபிசோடில் ரவுடிகள் வீட்டை இடிக்க போவதாக பிரச்சனை செய்கிறார்கள்.
  • சக்தி உடனே வெற்றியிடம் சென்று உதவி கேட்கிறாள்
  • வெற்றி சச்திக்கு ட்விஸ்ட் வைக்கிறாள்.
உதவி கேட்ட சக்திக்கு வெற்றி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்! title=

தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான தொடர்களுள் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க. ரசிகர்களின் மனங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கும் இத்தொடர், பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடக்கவுள்ளன. 

நேற்றைய சம்பவங்கள்..

பெண் பார்க்கப்போவதாக சொல்லிவிட்டு சக்தியுடன் வெற்றி, அழகான உடை உடுத்தி கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு கிளம்புகிறான். அடுத்து கோயிலில் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருக்க இவள் தான் கல்யாண புரோக்கர் சொன்ன பெண் என்று நினைத்து அவளிடம் பேச செல்ல அவள் கோபமடைந்து தன் கணவனை அழைக்க அந்த பெண்ணின் கணவன் வெற்றியை திட்டுகிறான். இதை பார்த்த சக்தி விழுந்து விழுந்து சிரிக்கிறாள். 

பிறகு சில பெண்களை பின்தொடர்ந்து செல்லும் வெற்றி அவர்கள்தான் அந்த பெண்கள் என நினைத்துக்கொள்கிறான்.அந்தப் பெண்களின் முன்னால் சென்று பார்க்க அனைவருமே வயது முதிர்ந்த கிழவிகளாக இருக்கிறார்கள். இதை பார்த்து வெற்றி டென்ஷன் ஆகிறான். 

மேலும் படிக்க | Cannes: கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற சேலை கட்டிய பாலிவுட் தேவதைகள்!

Meenakshi Ponnunga

அடுத்து வெற்றி சக்தியிடம் புரோக்கர் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்ல புரோக்கர் இல்லை நான் தான் இப்படி மாற்றிவிட்டேன் என்று வெற்றியிடம் சக்தி சொல்லி சிரிக்கிறாள். இறுதியாக ரங்கநாயகியின் வீட்டிற்கு அசோக் காரில் வந்து இறங்கி சரண்யாவை சந்தித்து அவளை காரில் அழைத்துச் செல்கிறான். எதிரே வெற்றியும் சக்தியும் வருகிறார்கள். இதையடுத்து என்ன நிகழவிருக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாமா? 

இன்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் ரவுடிகள் வீட்டை இடிக்க போவதாக பிரச்சனை செய்கிறார்கள் என்று துர்கா சக்திக்கு போன் செய்ய, சக்தி உடனே வெற்றியிடம் சென்று உதவி கேட்கிறாள். ஆனால் வெற்றி தன்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் உதவி செய்வேன் என்று சொல்கிறான்.

இதனால் அதிர்ச்சி அடையும் சக்தி அப்படி ஒரு உதவி எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி மீனாட்சி வீட்டிற்கு வருகிறாள். அங்கே ரவுடிகள் பிரச்சனை செய்ய ஒரு ரவுடியின் கையைப் பிடித்து சக்தி முறுக்குகிறாள். 

Meenakshi Ponnunga

இந்த சமயம் ஒரு கார் வந்து நிற்க அந்தக் காரில் இருந்து புஷ்பாவும் சங்கிலியும் இறங்கி வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள். உன் அம்மா மீனாட்சி யமுனாவின் கல்யாணத்திற்கு இந்த வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி விட்டாள் என்று ஒரு பத்திரத்தை காட்டுகிறார்கள். உடனே அங்கு போலீஸ் வர அந்த போலீசாரும் பத்திரத்தை பார்த்து புஷ்பா சொல்வது உண்மைதான் என்று சொல்கின்றனர். அதோடு ஒரே ஒரு நாள் மட்டும் பணத்தை ஏற்பாடு செய்ய அவகாசம் கொடுத்து விட்டு மெஸ்சை மூடுகிறார்கள்.

காணத்தவறாதீர்கள் மக்களே..

இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Pichaikkaran 2: ‘இப்படி ஏமாத்திட்டீங்களே விஜய் ஆண்டனி..’ பிச்சைக்காரன் 2 ட்விட்டர் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News