Delhi Murder : பிரிட்ஜில் பழைய காதலி... புது காதலியுடன் வீட்டிற்கு வந்த அப்தாப்... திடுக்கிடும் தகவல்கள்!

டெல்லியில் இளம்பெண் ஒருவர் கொலையான சம்பவத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 15, 2022, 01:47 PM IST
  • அவர் கொலைச்செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் இன்னும் கைப்பற்றவில்லை.
  • கொலை செய்யப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராமை 3 மாதங்கள் அந்த காதலன் பயன்படுத்தியுள்ளார்.
  • ரத்தக்கறை, உடல் பாகங்களை சந்தேகமில்லாமல் மறைக்க கூகுள் மூலம் தகவலை திரட்டியுள்ளார்.
Delhi Murder : பிரிட்ஜில் பழைய காதலி... புது காதலியுடன் வீட்டிற்கு வந்த அப்தாப்... திடுக்கிடும் தகவல்கள்! title=

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் நேற்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு அவற்றை புதைத்துள்ளார். 

காதலியின் உடல் பாகங்களை மறைத்துவைக்க 30 லிட்டர் பிரிட்ஜ் ஒன்றை புதிதாக அப்தாப் வாங்கியுள்ளார். அப்போது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சில வீட்டில் இருந்துபோதே, புதிய காதலி ஒருவரை அப்தாப் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 

மேலும் படிக்க | காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலன்! தில்லியில் நடந்த கொடூரம்

அப்தாப் - ஷ்ரத்தா ஆகியோருக்கு கடந்த மூன்று ஆண்டுகள் முன், மும்பையில் Bumble என்ற டேட்டிங் ஆஃப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவந்துள்ளனர். ஷ்ரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்தாப்பிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இதை அப்தாப் தொடர்ந்து மறுத்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே தகாராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,
கடந்த மே 18ஆம் தேதி, ஏற்பட்ட சண்டையில் அப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தததாக தெரிகிறது. 

ஷ்ரத்தாவை கொலை செய்த அடுத்த 15 - 20 நாள்களில், மற்றொரு பெண்ணை அதே Bumble டேட்டிங் ஆஃப் மூலம் தொடர்புகொண்டு, அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணிற்கு அப்தாப் மீது எவ்விதமான சந்தேகமும் எழவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அப்தாப் டெல்லி, தொழில்முறை சமையல் கலைஞராக பணியாற்றி வந்த நிலையில், ஷ்ரத்தாவை கொலை செய்தபின், ரத்தக்கறை, உடல் பாகங்கள் ஆகியவற்றை எப்படி டிஸ்போஸ் செய்வது என்பதை கூகுள் மூலம் தேடி அறிந்துள்ளார் என கூறப்படுகிறது. ஷ்ரத்தாவை வெட்ட பயன்படுத்திய கத்தியை போலீசார் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தனது கொலையை மறைக்க, ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை இவரே பயன்படுத்தி, ஷ்ரத்தாவின் நண்பர்களுடன் ஷ்ரத்தாவை போன்ற சாட் செய்துவந்துள்ளார். தொடர்ந்து, அவர் நண்பர்களுக்கு சந்தேகம் எழவே, இரண்டு மாதங்களுக்கு மேலாக போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கொடூரம்... 7 அடி குழியில் கணவனை புதைத்த மனைவி - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்ப

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News