பா. இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் - படப்பிடிப்பு தொடங்கியது

கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 03:45 PM IST
  • பா. இரஞ்சித் புதிய படம் தயாரிக்கிறார்
  • கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் உருவாகிறது
  • அசோக் செல்வன், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
 பா. இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் - படப்பிடிப்பு தொடங்கியது title=

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து அதை பூர்த்தியும் செய்யும். இரஞ்சித் இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குதிரைவால் உள்ளிட்ட பல படங்களை இரஞ்சித் தயாரித்துள்ளார். இயக்கத்தில் எப்படி இரஞ்சித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதேபோல் அவர் தயாரிக்கும் படத்துக்கும் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்க | மறக்குமா நெஞ்சம் - வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸானது

அந்தவகையில் இரஞ்சித் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.  பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகவிருக்கிறது. மேலும் இப்படத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனுபாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டோரும், நடிகைகள் கீர்த்தி பாண்டியன் , திவ்யா துரைசாமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

 

பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் தமிழ்ப்பிரபா மற்றும் ஜெய்குமார் திரைக்கதை, வசனத்தை எழுதுகின்றனர். O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அரக்கோணம்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.  

மேலும் படிக்க | விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!

தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் படம் உருவாகிறது. 

மேலும் படிக்க | தேடி வந்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு! நிராகரித்த சிம்பு! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News