நினைத்தேன் வந்தாய் அப்டேட்: கட்டான கரண்ட்.. எழிலை பார்த்து அலறிய குழந்தைகள்

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2024, 01:43 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • திடீரென கட் ஆகும் கரண்ட்.
  • பாட்டு பாடும் அஞ்சலி.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: கட்டான கரண்ட்.. எழிலை பார்த்து அலறிய குழந்தைகள் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி எங்களை விட்டு பிரிந்து போகக்கூடாது என சுடரிடம் சத்தியம் வாங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

திடீரென கட் ஆகும் கரண்ட் 

அதாவது, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகி விடுகிறது. குழந்தைகள் பயப்படுவாங்க என்பதால் சுடர் மெழுகுவர்த்தி கொண்டுவர அதே நேரத்தில் எழிலும் கொண்டு வர இருவரும் ஒரே மாதிரி யோசிப்பதை புரிந்து கொள்கின்றனர். 

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

இருவரும் குழந்தைகள் தூங்குவதால் அவர்களுக்கு விசிறிவிட்டு கொண்டிருக்க திடீரென குழந்தைகள் கண்டுபிடிக்க எழில் மெழுகுவர்த்தியோடு நிற்பதை பார்த்து பயப்படுகின்றனர். சுடர் பயப்படாதீங்க கரண்ட் இல்ல அதனால நீங்க பயப்படக்கூடாதுன்னு அப்பா தான் மெழுகுவர்த்தி கொண்டு வந்திருக்காரு என சொல்கிறாள். 

பிறகு கனகவல்லி கரண்ட் தான் இல்லையே எதுக்கு எல்லாரும் தனியா இருக்கீங்க, எல்லாரும் இங்க வாங்க ஒன்னா இருக்கலாம் என்று சொல்லி கூப்பிடுகிறாள். ராமையா இன்வெர்ட்டர் பிரச்சனை என்பதால் எல்லோரும் ஒரே இடத்தில் உட்காருகின்றனர். 

பாட்டு பாடும் அஞ்சலி

முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க அப்படியே இந்து பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி திகைத்து நிற்கின்றனர். இதைப் பார்த்த தொடர் இப்படியே விட்டால் இந்துமதியுடன் ஞாபகம் அதிகமா வந்து எல்லாரும் பீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க என்று அவள் பாட ஆரம்பிக்கிறாள். அதுவும் குடி போதையில் எழில் பாடிய பாடலை பாடி வெறுப்பேற்றுகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Eid Movies: ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1 width="100%">

 

Trending News