பிரபல நடிகர் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் இளம் பெண் தற்கொலை!

புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஒருவர், இளம் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2023, 06:21 PM IST
  • புஷ்பா படத்தில் ஹீரோவுக்கு நண்பராக நடித்தவர், ஜெகதீஷ்.
  • இவர் ஒரு பெண்ணை ஆபாச படம் எடுத்துள்ளார்.
  • இதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரபல நடிகர் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் இளம் பெண் தற்கொலை!  title=

கடந்த 2021ஆம் ஆண்டு, தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம், புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீராேவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்கள் மட்டுமன்றி, இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர், ஜெகதீஷ். இவர், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பராக நடித்திருப்பார். இவரது முழு பெயர், ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி. இவர் ஏற்கனவே மல்லேசம், ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978 உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் கேசவா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த இவருக்கு அப்படத்தின் ஹீரோவுடன் படம் முழுவதும் ட்ராவல் செய்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

இளம் பெண்ணுடன் பழக்கம்..

ஜெகதீஷிற்கு, காக்கிநாடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, நடிக்க வாய்ப்பு கேட்டு நடிகர் ஜெகதீஷை நாடி வந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பெண்ணுடன் ஜெகதீஷ் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அந்த பெண் ஜெகதீஷை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெகதீஷோ, சில காலம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜெகதீஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அந்த இளம் பெண் ஜெகதீஷ் உடனான தொடர்பை முறித்துக்கொண்டுள்ளார். இதனிடையே அவருக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தஞ்சாவூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவெஞ்சர்ஸ் பட நடிகர்!

Jagadeesh

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!

அந்த இளம் பெண், ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை ஜெகதீஷ் சமையலறையின் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து தான் எடுத்த வீடியோவை அந்த பெண்ணிடம் கதவைத்தட்டி காண்பித்துள்ளார். அந்த பெண்ணுடன் இருந்த வாலிபர், ஜெகதீஷை விரட்டி அடித்து போலிசிடம் புகார் கொடுப்பேன் என மிரட்டியிருக்கிறார். அப்போது அங்கிருந்து சென்ற ஜெகதீஷ், 2 நாட்கள் கழித்து அந்த பெண்ணை எடுத்த அரை நிர்வாண புகைப்படங்களை அவருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நடிகர் கைது..!

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, பஞ்சகுடா போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்த வாலிபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீஸார் விசாரித்தனர். ஜெகதீஷ் மிரட்டியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அந்த வாலிபர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ஜெகதீஷை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கணவரை பிரியும் ஐஸ்வர்யா ராய்? வீடியோ மூலம் வெளிவந்த உண்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News