சூர்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி!

தமிழகத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை விட ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ் டப்பிங் அதிக வசூலை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2022, 01:33 PM IST
  • RRR படம் தமிழகத்தில் ஐந்தே நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
  • டப்பிங் படங்கள் எதற்கும் தமிழகத்தில் இந்த அளவு வரவேற்பு கிடைத்தது இல்லை.
  • சென்னை நகரில் மட்டும் சுமார் 4.52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சூர்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி! title=

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் திரையரங்கில் கடந்த மார்ச்-25ம் தேதி வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் அதிக வசூல் சாதனையை படைத்துள்ளது.  ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படம் வித்தியாசமான முறையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.  ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்கள் தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது, இந்த படங்களை காட்டிலும் தற்போது வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சிறந்த வெற்றியை பெற்றுள்ளது.  ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்து வெற்றிநடைபோடுகிறது.

RRR Film Instagram

மேலும் படிக்க | பீஸ்ட் ட்ரைலர் பாக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க

இந்த படம் தமிழகத்தில் வெளியான வெறும் ஐந்தே நாட்களில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இதுபோன்று டப்பிங் செய்யப்பட்ட படங்கள் எதற்கும் தமிழகத்தில் இந்த அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில், இப்படத்திற்கு மட்டும் தான் இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  சமீபத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான எதற்கு துணிந்தவன் படத்தின் வசூல் சாதனையை ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் வெறும் நான்கே நாட்களில் முறியடித்து இருக்கிறது.  இந்த படம் சென்னை நகரில் மட்டும் சுமார் 4.52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

suriya from etharkum thuninthavan

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் சூர்யாவின் எதார்க்கும் துணிந்தவன் பாடத்தையும், ஆர்ஆர்ஆர் படத்தையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.  சூர்யாவை தாக்கும் விதமாக ராஜமௌலி செய்துவிட்டார், வெறும் நான்கு நாட்களில் சூர்யா படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல் ஒரு டப்பிங் படம் இவ்வவளவு வசூல் செய்து சாதித்துள்ளது என்று கூறி வருகின்றனர்.  மேலும் இப்படம் வார இறுதியில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் 31.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இது பாகுபலியின் வசூலை விட அதிகமானதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News