ஆர்ஆர்ஆர் வெற்றிக்காக வால்வோ கார் வாங்கிய ராஜமௌலி - விலை தெரியுமா?

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிகப்பிரபலமான வால்வோ காரை வாங்கியுள்ளார் இயக்குநர் ராஜமௌலி.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2022, 12:29 PM IST
  • ராஜமௌலி புதிதாக கார் வாங்கியுள்ளார்
  • வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
  • ஆர்ஆர்ஆர் வெற்றிக்காக வாங்கியுள்ளாராம்
ஆர்ஆர்ஆர் வெற்றிக்காக வால்வோ கார் வாங்கிய ராஜமௌலி - விலை தெரியுமா? title=

மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரான இப்படம், உலகளவில் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படத்துள்ளது. இந்திய அளவில் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலான 3வது திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

மேலும் படிக்க | கேஜிஎப் சக்சஸ் பார்ட்டியில் அஜித்தின் பஞ்ச் வசனம்

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், பாகுபலி கன்குளூசன் திரைப்படம், இந்தப் பட்டியலில் 2வதாக இணைந்தது. இப்போது, 3வதாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இணைந்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் மிகப்பெரிய தொகையை செலவழித்த ராஜமௌலி, படம் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நல்ல ஒத்துழைப்பை கொடுத்ததாக தெரிவித்த ராஜமௌலி, அவர்கள் இருவரும் தன்னுடைய தம்பிகள் எனவும் படத்தின் வெற்றிக்குப் பிறகான பிரஸ் மீட்டில் கூறினார்.

இந்த பிரஸ்மீட்டில் பேசிய ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜமௌலி தயாராக வேண்டும் என அன்போடு வேண்டுகோள் விடுத்தனர். தாங்கள் இருவரும் தயாராக இருப்பதாகவும், இரண்டாம் பாகம் உருவாவது இயக்குநர் ராஜமௌலி கையில் தான் இருப்பதாகவும் வெளிப்படையாக தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த ராஜமௌலி, காலம் தான் முடிவு செய்யும் என சிம்பிளாக முடித்தார். 

மேலும் படிக்க | கோப்ரா படத்துக்கு இப்போதே கிடைத்த அங்கீகாரம் - படக்குழு மகிழ்ச்சி

இதேபோன்றதொரு கதையை தயார் செய்வது குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை எனக் கூறியிருக்கும் அவர், கொஞ்சம் பிரேக் எடுக்க இருப்பதாகவும் கூறினார். அந்த பிரேக்கில் தான் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், வால்வோ நிறுவனத்தின் காஸ்டிலியான கார்களில் ஒன்றான VOLVO XC40 காரை வாங்கியிருக்கிறார். இதனை வால்வோ நிறுவனே பெருமையுடன் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News