நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..! போலீஸில் சிக்கிய குற்றவாளி-மன்னித்து விட சொன்ன நடிகை..!

Shobana House Theft: பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருடு போயுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளி பிடிப்பட்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2023, 04:47 PM IST
  • மலையாளம், தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்திருந்தவர் ஷோபனா.
  • இவர் வீட்டில் திருடு போயுள்ளது.
  • பிடிப்பட்ட குற்றவாளியை மன்னித்த ஷோபனா.
நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..! போலீஸில் சிக்கிய குற்றவாளி-மன்னித்து விட சொன்ன நடிகை..! title=

பரதநாட்டிய கலைஞராகவும் நடிகையாகவும் வலம் வருபவர், ஷோபனா. இவர், 80-90களில் பிரபல தமிழ் நடிகையாக விளங்கியவர். இவர், தளபதி படத்தில் ரஜினிகாந்திற்கு காதலியாக நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஷோபனாவின் வீட்டில் திருடு பாேயுள்ளது. 

நடிகை ஷோபனா:

மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஷோபனா. இவர், சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ‘நாட்டிய பேரொளி’ என அழைக்கப்படும் தமிழ் நடிகை பத்மினியின் உறவினர் இவர். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி என பல நடிகர்களுக்கு ஜோடியாக 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஷோபனா, சில ஆண்டுகளாக நடிகை அல்லது நடிகர்களுக்கு அம்மா-அக்கா ரோல்களில் நடித்து கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | 15 வருடங்களுக்கு பிறகு பெண்ணாக நடிக்கும் கமல்..! தசாவதாரத்திற்கு பிறகு புது அவதாரம்..!

திருட்டு: 

நடிகை ஷோபனா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பல அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவர் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டத்திலேயே இவரது வயதான இவரது அம்மாவும் வசித்து வருகிறார்.  இவரை, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த விஜயா என்பவர் கடந்த ஒரு வருடமாக ஷோபனாவின் வீட்டில் தங்கி அவருடய தாயார் ஆனந்த்தை உடனிருந்து கவனித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக, முதல் தளத்தில் வசிக்கும் தாயார் வைத்திருந்த பணம் திடீரென காணாமல் போனதாக  கூறப்படுகிறது. இது குறித்து ஷோபனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வீட்டு வேலை செய்யும் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக நடிகை சோபனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் மூலம் புகார் அளித்திருந்தார். 

குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்..

ஷோபனா புகார் கொடுத்ததை அடுத்து காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்த தீவிர விசாரணையில் இறங்கினர். போலீஸ் விசாரணையில் வீட்டு வேலை செய்யும் விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாகவும் திருடிய பணத்தை வீட்டின் கார் ஓட்டுனர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஜிபே மூலம் அவரது மகளுக்கு அனுப்பியதை ஒத்துக் கொண்டார். 

நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சொன்ன நடிகை..!

பணத்தை திருடிய விஜயா அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஷோபனா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். திருடியதை ஒத்துக் கொண்டதால் விஜயா தொடர்ந்து வீட்டிலேயே தங்கி வேலை செய்து திருடிய பணத்தை சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாக சொல்வதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை வேண்டாம் எனவும் நடிகை சோபனா போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | DD Returns Vs. LGM : ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம் எது..? தியேட்டரில் எந்த படத்தை பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News