விவசாயிகளுக்கான ஆதரவை வலுப்பெறச் செய்யுங்கள் - கமல்

இந்திய விவசாயிகள் குரலை வலுப்பெறச் செய்யுங்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Last Updated : Nov 16, 2017, 08:42 PM IST
விவசாயிகளுக்கான ஆதரவை வலுப்பெறச் செய்யுங்கள் - கமல் title=

தான் அரசியலுக்கு வந்து விட்டேன். விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியாகும் எனக் கூறிய கமல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், தலைநகரம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த மாதம் நவம்பர் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அகில இந்திய விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 172 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். விவசாயிகள் மாநாடுக்கு ஆதரவாக விவசாய விழிப்பு உணர்வு பதாகை ஒன்றை தனது கையில் ஏந்தியபடி நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

விவசாயிகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:-

 

 

விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News