ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகை..! அட இவரா இப்படி செய்தது?

Sureka Vani: பிரபல சினிமா துணை நடிகை, தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2023, 05:23 PM IST
  • பிரபல துணை நடிகை சுரேகா வாணி.
  • தன்னை விட 10 வயது குறைவான ஆணுடன் நெருக்கம்.
  • ஆண் நண்பருக்கு இவர் முத்தம் கொடுக்கும் போட்டோ வைரல்.
ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகை..! அட இவரா இப்படி செய்தது?  title=

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான துணை நடிகையாக விளங்குபவர், சுரேகா வாணி. இவர் தனது நண்பருடன் நெருக்கம் காட்டி எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

சுரேகா வாணி:

தனுஷ் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், சுரேகா வாணி. அதன் பிறகு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் வரிசையாக நடித்து புகழ் பெற்றார். வயது முதிர்ந்த தோற்றம், அக்கா, அம்மா என எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி நடிக்கும் திறமை இவரிடம் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. 

மேலும் படிக்க | ஒரே நாளில் சகோதரன்-சகோதரியை மாரடைப்புக்கு பலிகொடுத்த பிரபல நடிகர்..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்..

சுரேகா வாணி, இரு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். அதுவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிடுவது இவரது வழக்கம். ஏதாவது பட டைலாக்கிற்கு வாயசைப்பது, அல்லது வெளியூர் பயணங்களின் போது எடுத்த புகைப்படங்கள்-வீடியோக்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து கிடக்கும். இதனால், தனது ரசிகர்களை திரைப்படங்கள் மூலமாக மட்டுமன்றி சோஷியல் மீடியா மூலமாகவும் மகிழ்வித்து வருகிறார். 

கணவர் உயிரிழப்பு..

சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா, உடல் நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த வாணி, தற்போது இன்னொரு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் சம்மதத்துடன் வேறு ஒரு நபரை சுரேகா வாணி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக திரையுலக வட்டரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நடிகை வாணி எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார். 

ஆண் நண்பருடன் நெருக்கம்..

தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர், கே.பி.சௌத்ரி. இவர், ரஜினிகாந்தின் கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர். இவருக்கு 36 வயது ஆகின்றது. இவரும் நடிகை வாணியும் சமீபத்தில் ஒரு பார்டியில் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் முத்தம் கொடுத்து கொண்டது போன்ற நெருக்கமான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாணிக்கு 45 வயது என்பதால், தன்னை விட 10 வயது இளையவருடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். 

போதை பொருள் வழக்கில் சிக்கியவர்..

கே.பி சௌத்ரி பிரபல தயாரிப்பாளர் என்பதை தாண்டி, போதை பொருள் கடத்துபவர் என்றும் சில திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இவர், கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கு போதை மருந்துகள் சப்ளை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக இவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ! என்ன ஆனது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News