எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சூர்யா-41: காரணம் இதுதான்!

சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 28, 2022, 12:19 PM IST
  • சூர்யா - 41 படம் குறித்து புதிய தகவல்
  • சூர்யா 41 படத்தை, சூர்யா- ஜோதிகா தயாரிக்கவுள்ளனர்
  • சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் அண்மையில் ரிலீசானது
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சூர்யா-41: காரணம் இதுதான்! title=

சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தையடுத்து இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே பேச்சு அடிபட்டுவந்தது. இந்த நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா. ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா, அவரது 41ஆவது படமாக அமையவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பதுடன் மட்டுமல்லாது தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவும் உள்ளார் நடிகர் சூர்யா. பாலாவின் பரதேசி படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இந்தப் படத்துக்கும் இசையமைக்கவுள்ளார்.

சூர்யாவின் கரியரில் இயக்குநர் பாலாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொடக்க காலத்தில் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்துவந்த நடிகர் சூர்யாவை, இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா படம்தான் முதன்முதலாக திரும்பிப் பார்க்க வைத்தது. சூர்யாவை ஓர் ஆக்சன் ஹீரோவாகவும் ரசிகர்கள் பார்க்கத் துவங்கியது அந்தப் படத்திலிருந்துதான். அதன்பிறகு பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பிதாமகன் படம் சூர்யாவை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது.  அப்படத்தில் சூர்யாவின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. அதன் பிறகு பாலாவின் படத்தில் நடிக்காத சூர்யா,  பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டும் வந்துபோனார்.

மேலும் படிக்க | தவறவிட்ட கமல்; கச்சிதமாகக் கையிலெடுத்த சூர்யா: எதற்கும் துணிந்தவன் படம் எப்படி?

                                                                             surya

இந்த நிலையில்தான் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. சூர்யா இதில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கேரக்டரில் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளியாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சூர்யா- பாலா கூட்டணியில் வந்த முந்தைய இரு படங்களும் வெற்றிபடங்களாக அமைந்ததால் இந்தப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க சூர்யா வெர்ஷன் 3.0: சரிவைச் சரிசெய்துகொண்டது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News