Veera Serial Update : கடனை கேட்டு அவமானப்படுத்திய சேட்டு.. வீரா கொடுத்த பதில்

ZEE Tamil Veera TV Serial Episode 13 Update : வீரா சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்டில், சேட்டு வாங்கிய கடனுக்காக திட்டிக் கொண்டிருக்கும்போது வீராவுக்கு ராமச்சந்திரன் பணம் கொடுக்க முன் வருகிறார். ஆனால் வீரா அதனை மறுத்துவிடுகிறாள். ஏன் தெரியுமா?

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2024, 02:58 PM IST
  • வீராவை கடன் கேட்டு திட்டும் சேட்டு
  • உதவிய செய்ய முன்வரும் ராமச்சந்திரன்
  • பணத்தை வாங்காமல் மறுக்கும் வீரா
Veera Serial Update : கடனை கேட்டு அவமானப்படுத்திய சேட்டு.. வீரா கொடுத்த பதில் title=

ZEE Tamil Veera TV Serial Episode 13 Update : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஷின் அம்மா ராமச்சந்திரனுக்கு சாபம் விட வீரா அவரிடம் சென்று மன்னிப்பு கேட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது மாறன்ஜெயிலுக்குள் ஒரு தியாகியை பார்த்த நிலையில் அத்தை வள்ளிக்கு போன் போட்டு உடனே பெயில் வேண்டும். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது உடனே வக்கீலோட வா என்று சொல்லி ஃபோனை வைக்க வள்ளியும் கேசவனும் பதறி அடித்து ஓடி வருகின்றனர். மாறனை பார்த்து இப்போ உன்னை பெயில் எடுத்தா அப்பா கோவிச்சு பாரு என்று சொல்ல என்ன வெளிய எடுத்தா தானே பிரச்சனை இவரை எடுங்க என்று நண்பரான தியாகியை காட்டுகிறான். இதைத் தொடர்ந்து அவரை பெயிலில் எடுத்து விட்டு வள்ளி வீட்டுக்கு வருகின்றாள்.

மேலும் படிக்க | Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்

வீட்டில் ராமச்சந்திரன் சோகமாக உட்கார்ந்து இருக்க வள்ளி அந்த குடும்பத்துக்கு என்ன வேணாலும் உதவி பண்ணு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுக்கலாம் என்று சொல்ல அவர் உடனடியாக எழுந்து வீரா வீட்டிற்கு கிளம்புகிறார். வழியில் வீராவை பிடித்து சேட்டு ஒருவர் திட்டிக் கொண்டிருக்க டிரைவரை அனுப்பி என்ன பிரச்சனை என தெரிந்து வர சொல்கிறார். 

டிரைவர் ராமச்சந்திரனிடம் ஏதோ கடன் வாங்கி இருக்காங்க அதனை திருப்பி தரலைன்னு சேட்டு திட்டிருக்காரு என்று சொல்ல மீண்டும் வீட்டுக்கு வரும் ராமச்சந்திரன் கையில் பணத்தை எடுத்துக் கொண்டு வீராவை பார்க்க கிளம்புகிறார். வீராவிடம் பணத்தை கொடுத்து இதை நாங்கள் செய்து தப்புக்கு பிராயசித்தமா வச்சுக்கோங்க என்று சொல்ல வீரா அதை வாங்க மறுக்கிறாள்.

இந்த பணத்தை வாங்கிட்டா என் அண்ணன் எங்கள மன்னிக்காது. அது எங்கள வைராக்கியத்தோட வளத்திற்கு என சொல்ல வீராவை பார்த்து வியந்து போகிறார் ராமச்சந்திரன். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வர, வள்ளி அப்போது பணத்தை வாங்கிட்டாங்களா என்று கேட்க இவர் இல்லை என்று சொன்னதும் ஏன் இன்னும் எதிர்பார்க்கிறார்களா?என்று கேட்க ஏழைங்க உண்மையை மறைச்சிட்டு பணத்தை வாங்கிப்பாங்கனு நினைக்காத அவங்க வைராக்கியம் உள்ளவங்க என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Ajith Kumar: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் தற்போதைய போட்டோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News