'தளபதி 66' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய்?

நடிகர் விஜய் 'தளபதி 66' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Written by - RK Spark | Last Updated : May 28, 2022, 05:18 PM IST
  • நடிகர் விஜய் தற்போது 'தளபதி 66' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
  • முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
  • அடுத்ததாக கர்நாடகாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
'தளபதி 66' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய்? title=

நடிகர் விஜய் தற்போது 'தளபதி 66' படத்தில் பிசியாக நடித்து வருகிறார், ஏற்கனவே இந்த படம் பற்றி நிறைய தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகிக்கொண்டே வருகிறது.  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் மே-26ம் தேதியோடு நிறைவடைந்துவிட்டது.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர்.  மேலும் 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தின் மூலம் விஜய்க்கு, பிரபுதேவா கோரியோகிராப் செய்யவிருக்கிறார்.  நாளுக்கு நாள் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தோனியின் காதலி!

வெளியான தகவலின்படி, இப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரங்களான அத்வைத் வினோத் மற்றும் ஹர்ஷிதா கார்த்திக் ஆகிய இரண்டு குழந்தைகளின் தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது.  பென்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷின் மகனாக அத்வைத் வினோத்தும், பீஸ்ட் படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் சிறிய வேடத்திலும் நடித்திருந்தனர்.  விஜய் மற்றும் இயக்குனர் வம்சியுடன் பணிபுரிந்த நாட்டுபவம் குறித்த இந்த குழ்நதைகள் பகிர்ந்துள்ளது, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தாங்கள் ஆர்வமாக காத்திருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

Vijay

இதுகுறித்து சிறுவன் அத்வைத் தெரிவிக்கையில், அற்புதமான இயக்குனர் வம்சியுடன் பணிபுரிந்ததிலும், தளபதி 66 படத்தில் ஒரு பகுதியாகவும் இருப்பதை கவுரவமாக கருதுகிறேன்.  முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.  அடுத்ததாக ஹர்ஷிதா தெரிவித்ததாவது, உங்களுடன் பணிபுரிந்ததை கவுரவமாக உணர்கிறேன், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி, இது எனக்கொரு சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறியிருந்தார்.  முன்னர் சென்னையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பின்னர் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.  இது முழுக்க முழுக்க குடும்ப கதையம்சம் கொண்ட படம் என்று ஏற்கனவே இயக்குனர் வம்சி கூறிய நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது.

மேலும் படிக்க | தனுஷுடன் இணையும் ப்ரியங்கா... எந்தப் படத்தில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News