பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.   

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2023, 11:14 AM IST
  • 2 லட்சம் நிதி உதவி வழங்கிய பாலா.
  • 200 குடும்பங்களுக்கு உதவி உள்ளார்.
  • பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா! title=

விஜய் டிவி (கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.  கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மலைவாழ் மக்களுக்காக தன் சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி தந்தார். நகைச்சுவை நடிகராக வளர்ந்து வரும் பாலா தொடர்ந்து பல  சமூக சேவைகளை செய்து வருகின்றார். 

மேலும் படிக்க | கணவரின் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

தற்போது சென்னையில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திரு. பாலா நேற்று மாலை - அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு - குடும்பத்திற்கு தலா ( 1000 ) ரூபாய் வீதம் - 200 குடும்பங்களுக்கு  மொத்தமாக 2,00,000 ( இரண்டு லட்சம் ) உதவித் தொகை வழங்கியுள்ளார்.  பலரும் வீட்டை விட்டே வெளியே வர தயங்கி முடங்கி உள்ள நிலையில், தெருவில் இறங்கி உதவுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பாலாவின் செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பாலாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இயக்குனர் மோகன் ஜி பாலாவுக்கு தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். " வாழ்த்துக்கள் பாலா.. உன் மனசு யாருக்கும் வராது.. எனக்கு கூட வராது.. உன் பெறறோர்க்கும் உன்னை வளர்த்தவர்களுக்கும் தான் இந்த புகழ் எல்லாம்.. இன்று முதல் உனக்கு ரசிகன் நானும்" என்று  குறிப்பிட்டுள்ளார். மேலும் பலரும் இணையத்தில் வாழ்த்து கூறி உள்ளனர்.  சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் இன்னும் மழை நீர் தேங்கி உள்ளது.  மழை நின்று இரண்டு நாட்கள் ஆன போதிலும் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.  பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், உணவு இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.  ஹெலிகாப்டர் மூலம் தற்போது அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.  

மேலும் படிக்க | சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்... பாதுகாப்பாக மீட்ட மீட்புப் படையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News